• Sun. Aug 3rd, 2025

24×7 Live News

Apdin News

அமெரிக்காவில் கரு உருவாகி 30 ஆண்டு கழித்து பிறந்த குழந்தை – மருத்துவ உலகில் புதிய ஆச்சர்யம்

Byadmin

Aug 3, 2025


கரு தத்து கொடுக்கும் திட்டங்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்பு படம்

    • எழுதியவர், டானாய் நெஸ்டா குபெம்பா
    • பதவி, பிபிசி செய்திகள்

30 ஆண்டுகளுக்கும் மேலாக உறைநிலையில் பாதுகாக்கப்பட்ட கருவில் இருந்து அமெரிக்க தம்பதியினருக்கு பிறந்த ஆண் குழந்தை, புதிய உலக சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.

35 வயதான லிண்ட்சே மற்றும் 34 வயதான டிம் பியர்ஸ் தம்பதிக்கு 2025 ஜூலை 26 சனிக்கிழமையன்று ஆண் குழந்தை பிறந்தது. தாடியஸ் டேனியல் பியர்ஸ் என்று பெயரிடப்பட்ட அந்தக் குழந்தை ஆரோக்கியமாக உள்ளது.

பியர்ஸ் தம்பதியினர் ஏழு ஆண்டுகளாக குழந்தை பெறும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். எம்ஐடி டெக்னாலஜி ரிவியூவிடம் பேசிய டிம் பியர்ஸ், “இது அறிவியல் புனைக்கதை திரைப்படத்தில் நடைபெறும் சம்பவத்தைப் போல் இருக்கிறது” என தனது குடும்பத்தினர் நினைப்பதாகக் கூறினார்.

கருவை உறைய வைத்து பின்னர் அதை பயன்படுத்தி குழந்தை பெறும் தொழில்நுட்பத்தில், நீண்ட காலமாக உறைநிலையில் இருந்து, நேரடி பிரசவம் மூலம் வெற்றிகரமாக பிறந்த குழந்தை இது என்று நம்பப்படுகிறது.

By admin