• Tue. Mar 24th, 2026

24×7 Live News

Apdin News

அமெரிக்காவுடன் எந்தவொரு உரையாடலிலும் ஈடுபடவில்லை | டொனால்ட் டிரம்ப் அறிக்கைக்கு ஈரான் மறுப்பு

Byadmin

Mar 24, 2026


ஈரான் அரசு, டொனால்ட் டிரம்ப் வெளியிட்டதாகக் கூறப்படும் அறிக்கைகளை முற்றிலும் மறுத்துள்ளது. அமெரிக்காவுடன் எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் தாங்கள் ஈடுபடவில்லை என ஈரான் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

ஈரானின் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்ததாவது, அமெரிக்காவுடன் பின்னணியில் எந்தவொரு இரகசிய உரையாடல்களும் இடம்பெறவில்லை என்றும், அத்தகைய தகவல்கள் முற்றிலும் தவறானவை என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், “மேற்கு ஆசியாவில் உள்ள அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் எங்கள் இலக்குகளாக இருக்கும்” என்ற எச்சரிக்கை வெளியிடப்பட்ட பின்னரே டிரம்ப் தனது நிலைப்பாட்டில் மாற்றம் காட்டியதாகவும் ஈரான் தரப்பு குறிப்பிட்டுள்ளது. இந்தக் கருத்து பிராந்திய பாதுகாப்பு சூழ்நிலையை மேலும் பதற்றப்படுத்தக்கூடியதாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான உறவுகள் தொடர்ந்து பதற்றநிலையிலேயே நீடித்து வருகின்றன. குறிப்பாக மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் இரு நாடுகளின் அரசியல் மற்றும் இராணுவ நிலைப்பாடுகள் மோதல்களை அதிகரிக்கும் அபாயம் காணப்படுகின்றது

The post அமெரிக்காவுடன் எந்தவொரு உரையாடலிலும் ஈடுபடவில்லை | டொனால்ட் டிரம்ப் அறிக்கைக்கு ஈரான் மறுப்பு appeared first on Vanakkam London.

By admin