• Sat. Feb 8th, 2025

24×7 Live News

Apdin News

அமெரிக்கா: இந்தியர்களை கைவிலங்கிடப்பட்டு அனுப்பிய விவகாரத்தில் என்ன நடந்தது? முழு விவரம்

Byadmin

Feb 7, 2025


அமெரிக்கா, டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், US Govt/Representative

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

அமெரிக்காவில் சட்ட விரோதமாகக் குடியேறியதாகக் கூறப்படும் இந்தியாவை சேர்ந்தவர்களை ராணுவ விமானத்தில் கைவிலங்கிட்டு இந்தியாவுக்கு திருப்பி அனுப்பிய விவகாரம் பெரும் பேசுபொருளாகியுள்ளது. இந்த விவகாரத்தில் தற்போது வரை நடந்தது என்ன?

இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் சட்ட விரோதமாக, ஆவணங்களின்றி குடியேறியவர்களை திருப்பி அனுப்புவதில் முனைப்பாக செயல்பட்டு வருகிறார்.

சட்ட விரோத குடியேறிகளைத் திருப்பி அனுப்புவது, டிரம்பின் தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாகவே இருந்தது. அதிபரான முதல் நாளில் டிரம்ப் கையெழுத்திட்ட உத்தரவுகளில் குடியேற்றம் சம்பந்தப்பட்ட உத்தரவுகள் முக்கியமானவை.

அதிபராக பதவியேற்றதும் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் எனக் கூறி, கொலம்பியா நாட்டைச் சேர்ந்த சிலரை ராணுவ விமானத்தில் டிரம்ப் அரசு திருப்பி அனுப்பியது. கைகள் கட்டப்பட்டு ராணுவ விமானத்தில் வந்தவர்களை கொலம்பியா அரசு ஏற்க மறுத்தது. சட்ட விரோதமாக குடியேறியவர்களை கண்ணியத்துடன் அனுப்ப வேண்டும், ராணுவ விமானத்தில் அனுப்பக் கூடாது எனக் கூறிய கொலம்பியா அதிபர், அமெரிக்க ராணுவ விமானம் தரையிறங்க அனுமதி மறுத்துவிட்டார்.

By admin