• Sun. Feb 23rd, 2025

24×7 Live News

Apdin News

அமெரிக்கா: காஷ் படேல் எஃப்பிஐ தலைவராக பதவியேற்பு – எதிர்ப்பவர்கள் அவரைப் பார்த்து அஞ்சுவது ஏன்?

Byadmin

Feb 22, 2025


காஷ் படேல், அமெரிக்கா, டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய வம்சாவளியை சேர்ந்த காஷ் படேல் அமெரிக்காவின் எஃப்பிஐ-யின் புதிய இயக்குநராக பதவியேற்றுள்ளார்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்திய வம்சாவளியை சேர்ந்த காஷ் படேலை அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ-யின் இயக்குநராக புதிதாக நியமித்துள்ளார்.

காஷ் படேல் பகவத் கீதையின் மீது கை வைத்து எஃப்பிஐ-யின் இயக்குநராக பதவியேற்றுக்கொண்டார்.

“உலகின் தலைசிறந்த நாட்டில் சட்ட அமலாக்க நிறுவனத்திற்கு தலைமை தாங்கப் போகும் முதல் தலைமுறை இந்தியரிடம் நீங்கள் பேசிக்கொண்டிருக்கிறீர்கள். இது உலகில் வேறு எங்கும் நடக்க இயலாது. எஃப்பிஐ-க்கு உள்ளேயும் வெளியேயும் உள்ளவர்கள் அவர்கள் செயல்களுக்கு பொறுப்பாளிகளாக்கப்படுவார்கள் என்று நான் உறுதியளிக்கிறேன்”, என்று பதவியேற்ற பிறகு காஷ் டேல் தெரிவித்தார்.

டிரம்பின் தீவிர அபிமானியான காஷ் படேல், அமெரிக்காவின் மத்திய புலனாய்வு முகமையான எஃப்பிஐ-யில் பல மாற்றங்களை செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

By admin