• Sun. Mar 8th, 2026

24×7 Live News

Apdin News

அமெரிக்கா ராணுவ ரீதியாக தலையிட்ட இந்த 5 நாடுகளில் என்ன நடந்தது? ஒரு மீள் பார்வை

Byadmin

Mar 8, 2026


அமெரிக்க ராணுவ தலையீடு, மத்திய கிழக்கு, வடக்கு ஆப்ரிக்கா

பட மூலாதாரம், Getty Images

மத்திய கிழக்கில் அமெரிக்கா மீண்டும் ஒரு போரைத் தொடங்கியுள்ளது. அந்தப் பிராந்தியம், நீண்டகாலமாக அமெரிக்காவின் ராணுவ தலையீடுகளை எதிர்கொண்டுள்ளது. ஆனால், அமெரிக்காவின் தலையீடு எதிர்பார்த்த முடிவைக் கொடுத்ததா என்ற கேள்விக்கு இல்லை என்பதே பதில்.

இந்த ஆண்டு (2026) பிப்ரவரி 28 அன்று இரான் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், அந்நாட்டின் அதிஉயர் தலைவர் அலி காமனெயி கொல்லப்பட்டார். இரானின் அணுசக்தி திட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரவும், அங்கு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தப் போவதாகவும் கூறும் அதிபர் டொனால்ட் டிரம்பின் முக்கிய இலக்குகளில் ஒருவராக அவரும் இருந்தார்.

இந்தப் பிராந்தியத்தில் இதற்கு முன்னரும் பல அமெரிக்க அதிபர்கள் தலையிட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் டிரம்புக்கு முன்னோடியாக இருப்பவர்கள், அமெரிக்காவின் அதிபராக இருந்த சீனியர் புஷ் மற்றும் ஜூனியர் புஷ், ஒபாமா ஆகியோர். இராக்கில் சதாம் உசேன், லிபியாவில் முஅம்மர் அல் கடாஃபி ஆகியோருக்கு எதிராக ஏற்கெனவே நடவடிக்கை எடுத்து அவர்களை வீழ வைத்தது, அந்த நாடுகளுக்கு ஜனநாயகத்தையோ அல்லது சுதந்திரத்தையோ மீட்டுத் தரவில்லை. அதுமட்டுமின்றி, இன்று வரை நீடிக்கும் உள்நாட்டுப் போர் மற்றும் நிலையற்றத் தன்மையையே அது ஏற்படுத்தியுள்ளது.

சிரியாவில், ஐ.எஸ்.ஐ.எஸ் எனும் அமைப்பை ஒழிக்க அமெரிக்கா உதவியது. ஆனால் 2024இல் அசத் வீழ்ச்சிக்குப் பிறகு, பிற இஸ்லாமிய குழுக்கள் அங்கு அதிகாரத்தை கைப்பற்றின. ஆப்கானிஸ்தானில் சுமார் இரண்டு தசாப்த அமெரிக்க தலையீட்டிற்குப் பிறகு, 2021இல் தாலிபன் மீண்டும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது.

ஒபாமா காலத்தில் ராஜ்ஜீய தூதராகவும் பாதுகாப்பு ஆலோசகராகவும் பணிபுரிந்த ஃபிலிப் கோர்டன், 2015ஆம் ஆண்டு எழுதிய பிரபலமான ஒரு கட்டுரையில், மத்திய கிழக்கில் அமெரிக்காவின் தலையீடுகளை பின்வருமாறு சுருக்கமாக விவரிக்கிறார்:

By admin