• Sat. Oct 12th, 2024

24×7 Live News

Apdin News

அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது – Vanakkam London

Byadmin

Oct 12, 2024


2024-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு ஜப்பானிய அமைப்பான நிஹோன் ஹிடாங்க்யோவுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அணு ஆயுதங்கள் இல்லாத உலகை அடைவதற்கான முயற்சிகளை மேற்கொண்டமைக்காக அந்த அமைப்புக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹிரோஷிமா, நாகசாகியில் அணுகுண்டால் பாதிக்கப்பட்டோரின் நலனுக்காக தொடர்ந்து அந்த அமைப்பு பணியாற்றி வந்துள்ளதுடன், அணு ஆயுதங்களை மீண்டும் பயன்படுத்தக் கூடாது என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இதேவேளை, பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வருகிற 14ஆம் திகதி அறிவிக்கப்பட உள்ளது.

அத்துடன், டிசம்பர் 10ஆம் திகதி ஸ்டாக்ஹோமில் நடைபெறும் விழாவில் இந்த விருதுகள் வழங்கப்படும்.

By admin