19
இலண்டனில் ஆறு வயது சிறுமியான பெர்ல், தன்னுடைய தாயின் உயிரைக் காப்பாற்றிய துணிச்சலுக்காக பாராட்டுப் பெற்றுள்ளார். தாயார் கரோல் திடீரென மயக்கம் அடைந்து விழுந்தபோது, என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்திருந்த பெர்ல் உடனடியாக 999 எண்ணை அழைத்தார்.
“எனக்கு அந்த எண்ணை தெரிந்திருந்தது. நான் அம்மாவை மிகவும் நேசிக்கிறேன், அதனால் அதை நினைவில் வைத்திருந்தேன்,” என்று பெர்ல் கூறினார்.
கிராய்டனில் உள்ள வீட்டில் கடந்த கோடையில் இந்த சம்பவம் நடந்தது. 36 வயதான கரோல் மூளையில் இரத்தக் கசிவு காரணமாக வலிப்பு ஏற்பட்டு மயக்கமடைந்தார். அப்போது பெர்லும், அவளது நான்கு வயது தங்கை அமீலியாவும் மட்டுமே வீட்டில் இருந்தனர்.
பெர்ல் தன்னுடைய அம்மாவின் தொலைபேசியை திறந்து, 999-ஐ அழைத்து, “அம்மா சோபாவில் படுத்திருக்கிறார்… விழித்துக் கொள்ளவில்லை. கண்கள் திறந்து மூடிக்கொண்டே இருக்கின்றன,” என்று அமைதியாக விளக்கினார். மேலும், அம்மா வாய் நுரைத்ததும், உடல் நடுங்கியதையும் கூறி, தங்களது முகவரியையும் தெளிவாக தெரிவித்தார்.
“எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது,” என்று பெர்ல் கூறியபோது, அழைப்பை எடுத்த பணியாளர் “பயப்பட வேண்டாம், நாங்கள் வருகிறோம்,” என்று அவரை உறுதியளித்தார்.
ஐந்து நிமிடங்களுக்குள் வந்த மருத்துவ உதவி குழு, சிறுமிகளின் தைரியத்தையும் அமைதியையும் பாராட்டியது. இந்தச் சம்பவத்திற்காக பெர்ல் மற்றும் அவளது தங்கை அதிகாரப்பூர்வமாக கௌரவிக்கப்பட்டனர்.