நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் இன்று காலை 10 மணிக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக தெரிவித்து இருந்தார். இதனால் அவரது அறிவிப்பு என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
இந்த நிலையில், தற்போது ராகவா லாரன்ஸ் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி உங்கள் கடமையை நேர்மையுடன் செய்யுங்கள். உங்கள் ஆலோசனையும் வழிகாட்டுதலும் எனக்குத் தேவை.
நான் அரசியலில் ஈடுபடுவேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. பணம் சம்பாதிப்பதிலோ அல்லது பதவியை அடைவதிலோ எனக்கு எந்த நோக்கமும் இருந்ததில்லை. நான் பெரிதும் மதிக்கும் மற்றும் எனக்கு நெருக்கமான ஒருவர் அரசியலுக்கு வந்தால், அவருடன் இணைந்து நின்று, தனிப்பட்ட முறையில் நான் செய்து வந்ததை விடப் பரந்த அளவில் சமூகத்திற்குப் பணியாற்ற வேண்டும் என்பது மட்டுமே என் எண்ணமாக இருந்தது.
இன்று, சூழ்நிலைகள் என்னை அரசியலில் ஈடுபட வேண்டிய ஒரு கட்டத்திற்குக் கொண்டு வந்துள்ளன.
இன்று காலை 10:00 மணிக்கு நான் பகிரவுள்ள காணொளியில், அரசியல் குறித்த எனது புரிதல், அது என் வாழ்வில் எப்படி வந்தது, அரசியல் குறித்த என் தாயாரின் பார்வை மற்றும் என் பயணத்தை வடிவமைத்த சில முக்கியமான மற்றும் சுவாரஸ்யமான நிகழ்வுகள் குறித்து, என் மனதிலிருந்து முழுமையான நேர்மையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் பேசியுள்ளேன்.
இக்காணொளியை இறுதிவரை பார்த்து, உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் அனைவரின் ஆசியுடன் நான் இந்த முக்கியமான அடியை எடுத்து வைக்கும்போது, உங்கள் ஆலோசனையும் வழிகாட்டுதலும் எனக்கு மிகவும் முக்கியமானதாக அமையும் என்று கூறியுள்ளார்.
ராகவா லாரன்ஸின் இந்த பதிவின் மூலம் அவர் அரசியலில் ஈடுபட உள்ளதை அவர் சூசமாக தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த சில தினங்களாக திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் த.வெ.க. சார்பில் ராகவா லாரன்ஸ் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி வந்தது குறிப்பிடத்தக்கது.