• Wed. Jul 15th, 2026

24×7 Live News

Apdin News

அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடை தையல் கூலி உயர்த்தி வழங்கப்படும்: முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு

Byadmin

Jul 15, 2026


ஆட்சியில் மட்டுமல்லாது, அகில இந்திய காங்கிரஸ் தலைவராகவும் செயல்பட்டு எடுத்துக்காட்டாக காமராஜர் விளங்கினார். அரசியல் சிக்கல்களையும் எளிதில் தீர்த்து வைத்தவர். அவரை விரும்பாத தலைவர்களே இல்லை. பல மாநிலங்களிலும் காமராஜர் ஆட்சி எப்போது வரும்? என கேட்கின்றனர். மத்திய அரசு அவருக்காக நாணயமும் வெளியிட்டுள்ளது.

புதுவையில் ஏழை மாணவர்களும் கல்வி பயில வேண்டும் என்பதே அரசின் எண்ணம். அதற்காகவே பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 100 சதவீதம் கல்வியை புதுவையில் தர முடியுமா? என்ற கேள்வி இருந்தது. தற்போது பள்ளி கல்வி மட்டுமின்றி, கல்லூரி கல்வியையும் வழங்க முயற்சித்து வருகிறோம்.

புதுவையில் படிக்காதவர்களே இல்லை என்ற நிலையை உருவாக்கியுள்ளோம். பள்ளிகல்வி முடித்த மாணவர்கள் அனைவரும் உயர்கல்வி படிக்க வழி செய்துள்ளோம். இதனால் வரும்காலத்தில் வீட்டில் உள்ள அத்தனை குழந்தைகளும் பட்டம் பெற்றவர்கள் என்ற நிலை இருக்கும்.

அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் உயர்கல்வி பெற முடியுமா? என்ற நிலை இருந்தது. இதற்காக அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வியில் 10 சதவீதம் ஒதுக்கீடு வழங்கினோம். இதன்மூலம் அரசு பள்ளி மாணவர்கள் மருத்தும், பொறியியல், கலை, அறிவியல் என உயர்கல்வி படிக்கின்றனர்.

By admin