• Fri. Feb 20th, 2026

24×7 Live News

Apdin News

அரவிந்தர் கோஷ் புதுச்சேரி வந்தது ஏன்? சுதந்திர போராட்ட வீரர் ஆன்மீகவாதியான கதை

Byadmin

Feb 20, 2026


ஸ்ரீ அரவிந்தர் கோஷ்

பட மூலாதாரம், Sri Aurobindo Ashram Publication

படக்குறிப்பு, ஸ்ரீ அரவிந்தர் கோஷ்

1872-ம் ஆண்டு வாக்கில், இந்தியாவில் பிரிட்டிஷ் பேரரசு அதன் உச்சத்தை எட்டியிருந்தது. 1857-ஆம் ஆண்டின் கிளர்ச்சி கொடூரமான முறையில் ஒடுக்கப்பட்ட பிறகு, இந்தியாவின் ஆட்சி அதிகாரம் கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து பிரிட்டிஷ் முடியாட்சியிடம் மாறியிருந்தது.

இந்தச் சூழலில், ஆகஸ்ட் 15, 1872 அன்று அன்றைய இந்தியாவின் தலைநகரான கொல்கத்தாவில் அரவிந்தர் அக்ராய்ட் கோஷ் பிறந்தார். அரவிந்தரின் தந்தை கிருஷ்ண தன், தனது தோழி அனெட் அக்ராய்ட் என்பவரின் நினைவாக அரவிந்தருக்கு ‘அக்ராய்ட்’ என்ற நடுப் பெயரைச் சூட்டினார்.

1893-ல் அரவிந்தர் இந்தப் பெயரைத் தனது பெயரிலிருந்து நீக்கினார். 1879-இன் மத்தியில், கிருஷ்ண தன் தனது முழு குடும்பத்துடன் இங்கிலாந்துக்குச் சென்றார்.

அங்கு சென்ற மூன்று மாதங்களுக்குள் அவர் இந்தியா திரும்ப வேண்டியிருந்தது. ஆனால் தனது மூன்று மகன்களையும் இங்கிலாந்தில் இருந்த தனது நண்பர் வில்லியம் ட்ரேவிட்டிடம் விட்டு வந்தார்.

அதுலிந்திரநாத் சதுர்வேதி தனது ‘மிஸ்டிக் ஃபயர்: தி லைஃப் ஆஃப் ஸ்ரீ அரவிந்தோ’ என்ற புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்

By admin