• Wed. Aug 27th, 2025

24×7 Live News

Apdin News

அறிகுறியே இல்லாமல் திடீரென மாரடைப்பு வருவதற்கான 4 காரணங்கள் எவை?

Byadmin

Aug 27, 2025


பார்ப்பதற்கு மிகவும் ஆரோக்கியமாக தோன்றும் ஒருவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு அப்படியே மயங்கி விழுந்து இறப்பதை பற்றிய செய்திகள் அவ்வப்போது வருகின்றன. திருமண வீட்டில் மகிழ்ச்சியோடு நடனமாடியவர் மரணம், வாகனம் ஓட்டியபடி சொந்த வீடு திரும்பிக் கொண்டிருந்தவர் சுருண்டு விழுந்து பலி என செய்திகளை படிக்கும்போது அதிர்ச்சி ஏற்படுகிறது.

தமிழ்நாட்டில் அண்மையில் திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு பேருந்து ஓட்டுநர், வாகனம் ஓட்டும்போதே மாரடைப்பால் உயிரிழந்தார், கண்டக்டரின் துரிதமான செயல்பாட்டால் பேருந்து விபத்து தவிர்க்கப்பட்டது. மற்றொரு சம்பவத்தில், மேற்கு தாம்பரத்தில் 20 வயது பொறியியல் மாணவர், கல்லூரி விடுதியில் மயங்கி விழுந்து இறந்தார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்பட்டது.

இதய கோளாறு காரணமாக திடீர் மரணங்கள் இளைஞர்களிடையே அதிகமாகி வருவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள். இந்த மரணங்கள் ஏற்படுவதற்கான காரணங்களாக மாரடைப்பு நோய், மரபியல் காரணி, இதய தசை தடிமனாதல் என பலவிதமானவை உள்ளன. இவற்றில் மிகவும் பரவலாக நடப்பது மாரடைப்பு நோய்தான்.

இவ்வாறான மரணங்கள் அதிகரிப்பதை அடுத்து, கர்நாடகா மாநில அரசு திடீர் மரணங்களை, குறிப்பாக 45 வயதுக்கு உட்பட்டோரின் மரணங்களை அறிவிப்புச் செய்ய வேண்டியதாக, அறிவித்துள்ளது. இதன் பொருள், மருத்துவமனைக்கு வெளியே இத்தகைய மரணங்கள் நடந்தால், அவற்றை அரசுக்கு தெரிவிக்க வேண்டும். இந்த மரணங்களுக்கு சரியான காரணத்தை கண்டறிய பிரேத பரிசோதனை செய்ய வேண்டியதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தின் இந்த புதிய முடிவு இந்தியாவில் இவ்வாறான முதல் முயற்சியாகும்

By admin