• Sun. Mar 29th, 2026

24×7 Live News

Apdin News

அறிமுகமானதும் அதிக கவனம் பெற்ற ‘நோட்டா’ என்ன ஆனது? ஓர் அலசல்

Byadmin

Mar 29, 2026


தமிழ்நாடு, சட்டமன்ற தேர்தல், நோட்டா

பட மூலாதாரம், Getty Images

கடந்த 2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் முதல்முறையாக வாக்களித்த ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ராஜலட்சுமி, இதுவரை மூன்று தேர்தல்களில் நோட்டாவுக்கே வாக்களித்துள்ளார்.

“நான் முதல்முறையாக வாக்களித்தபோது நோட்டாவை தேர்வு செய்தேன். ஆனால் காலப்போக்கில் அதனால் எந்த மாற்றமும் இல்லை என உணர்ந்து தேர்தலில் வாக்களிப்பதையே குறைத்துவிட்டேன். என் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சிறப்பானவர் எனத் தெரிந்தால் மட்டும் வாக்களிக்கும் முடிவில் இருக்கிறேன்,” என்கிறார் ராஜலக்‌ஷ்மி.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற தேர்தல்களில் நோட்டாவின் செயல்பாட்டைப் பார்த்தால் ‘நோட்டா என்ன ஆனது’ என்கிற கேள்விதான் பலருக்கும் எழும். ஆனால் ‘நோட்டாவால் என்ன ஆகக்கூடும்?’ என்கிற கேள்வியையும் அனுபவம் வாய்ந்த வாக்காளர்களும், செயற்பாட்டாளர்களும் முன்வைக்கின்றனர்.

இந்தியா நோட்டாவின் முதல் கட்டத்தில்தான் இருக்கிறது என்கிறார் இந்திய முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரான டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி.

நோட்டா வாக்குகள் தங்களுக்குப் பாதகமாக அமையலாம் என அரசியல் கட்சிகள் அதை எதிர்மறையாகவே பார்ப்பதாகக் கூறுகிறார் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன்.

By admin