• Sun. Mar 8th, 2026

24×7 Live News

Apdin News

அஸ்வின், டிராவிட் இணைந்து ஐரோப்பிய டி20 பிரீமியர் லீக் அணியை வாங்குவது ஏன்?

Byadmin

Mar 8, 2026


ராகுல் டிராவிட், ரவிச்சந்திரன் அஸ்வின்,  இந்திய அணி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ராகுல் டிராவிட் (வலது) மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின்

இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான்களான ராகுல் டிராவிட் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் ஐரோப்பிய டி20 பிரீமியர் லீக்கில் ஓர் அணியை வாங்கியுள்ளனர்

ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ள ஆறு அணிகள் கொண்ட தொடரில், கிளாஸ்கோவை (Glasgow) மையமாகக் கொண்ட அணியை வாங்குவதற்கு ஓர் இந்திய குழு ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் அஸ்வினும் டிராவிடும் இடம்பெற்றுள்ளதாக பிபிசி ஸ்போர்ட் அறிகிறது.

மேலும், ரோட்டர்டாமை சேர்ந்த நெதர்லாந்தின் இரண்டாவது அணியை தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர்களான ஃபாஃப் டு பிளெசிஸ், ஹென்றி கிளாசன் மற்றும் ஜாண்டி ரோட்ஸ் ஆகியோர் தலைமையிலான ஒரு முதலீட்டாளர் குழுவிற்கு விற்க ஐரோப்பிய டி20 பிரீமியர் லீக் தயாராகி வருகிறது.

இந்த இரண்டு அணிகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனவரி மாதம் ஆம்ஸ்டர்டாம், பெல்ஃபாஸ்ட் மற்றும் எடின்பரோ ஆகிய அணிகள் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து முதலீட்டாளர்களுக்கு விற்கப்பட்டன. அதைத் தொடர்ந்து தற்போது இந்த புதிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

By admin