• Tue. Jun 10th, 2025

24×7 Live News

Apdin News

ஆக்ஸியம் 4: விண்வெளி வீரர்கள் அன்னப் பறவை பொம்மை, அல்வா எடுத்துச் செல்வது ஏன்?

Byadmin

Jun 10, 2025


சுபான்ஷு சுக்லா, ஆக்ஸியம் 4, சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையம், நாசா, இஸ்ரோ,  விண்வெளி ஆராய்ச்சி, முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள், செய்திகள்

பட மூலாதாரம், X/AXIOM SPACE

  • எழுதியவர், ஶ்ரீகாந்த் பக்‌ஷி
  • பதவி,

சர்வதேச விண்வெளி மையத்திற்கு இது வரை 270 விண்வெளி ஆய்வாளர்கள் சென்றுள்ளனர். ஆனால் ஒரு இந்தியர் கூட அங்கே செல்லவில்லை. இந்தியாவில் பிறந்து வளர்ந்த சுபான்ஷு சுக்லா இந்த கவலையை நிவர்த்தி செய்யப் போகிறார். இவரின் இந்த பயணம் மூலமாக இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி புதிய மைல்கல்லை எட்டப் போகிறது.

சோயுஸ் விண்கலத்தின் மூலமாக, சோவியத் யூனியனின் உதவியோடு ராகேஷ் சர்மா முதன்முறையாக விண்ணுக்குச் சென்றார். 1984-ஆம் ஆண்டு இந்த பயணம் நிகழ்ந்தது. விண்ணுக்குச் சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார் அவர்.

அதன் பின், கல்பனா சாவ்லா மற்றும் சுனிதா வில்லியம்ஸ் போன்றோர் விண்ணுக்குச் சென்றனர். ஆனால் அவர்கள் இந்திய வம்சாவளிகளே அன்றி இந்தியாவில் பிறந்து வளர்ந்தவர்கள் அல்ல.

ராகேஷ் சர்மாவின் விண்வெளிப் பயணத்தைத் தொடர்ந்து 40 ஆண்டுகள் கழித்து சுக்லா விண்ணுக்குச் செல்கிறார். விண்ணுக்குச் செல்லும் இரண்டாவது இந்தியராகவும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் முதல் இந்தியராகவும் அவர் இருப்பார்.

By admin