• Mon. Dec 8th, 2025

24×7 Live News

Apdin News

ஆசிம் முனீர் குறித்து ஜெய்ஷங்கர் கூறிய எந்த கருத்து பாகிஸ்தானை கோபப்பட வைத்தது?

Byadmin

Dec 8, 2025


பாகிஸ்தான் ராணுவத் தளபதி மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அதன் தலைவர் குறித்து கருத்துகளைத் தெரிவித்தார்.

பாகிஸ்தான் தனது ராணுவம் மற்றும் ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்த கருத்துகளுக்கு பதிலளிக்கும் விதமாக கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஜெய்சங்கரின் கருத்துகள் “ஆத்திரமூட்டுபவை, ஆதாரமற்றவை மற்றும் பொறுப்பற்றவை” என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

சனிக்கிழமையன்று நடந்த ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ் உச்சி மாநாட்டில்’ ஆசிம் முனீர் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஜெய்சங்கர், “இன்று பாகிஸ்தானில் என்ன நடக்கிறது என்பது அதன் 80 ஆண்டுகால வரலாற்றின் பிரதிபலிப்பாகும்” என்று கூறியிருந்தார்.

மேலும், “பாகிஸ்தானில் ஏதோ ஒரு விதத்தில் ராணுவமே ஆட்சி செய்கிறது. சில நேரங்களில் ராணுவம் வெளிப்படையாக இதைச் செய்கிறது, சில நேரங்களில் திரைக்குப் பின்னால் இருந்து செய்கிறது,” என்றும் ஜெய்சங்கர் தெரிவித்திருந்தார்.

பிபிசி உருதுவின்படி, “பாகிஸ்தான் ஒரு பொறுப்புள்ள நாடு, ஆயுதப்படைகள் உட்பட அதன் அனைத்து அமைப்புகளும் தேசிய பாதுகாப்பின் வலுவான தூண்களாகும். இந்த அமைப்புகள் நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க உறுதியுடன் உள்ளன,” என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தாஹிர் அந்த்ராபி தெரிவித்தார்.

By admin