• Sat. Oct 4th, 2025

24×7 Live News

Apdin News

ஆசியக்கோப்பை: சூர்யகுமார் பாகிஸ்தானுடன் நடந்துக்கொண்ட விதம் யாரின் முடிவு?

Byadmin

Oct 2, 2025


சூர்யகுமார்

பட மூலாதாரம், Getty Images

“நீங்கள் சாம்பியன்களாக வெற்றி பெற்றுள்ளீர்கள், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளீர்கள். ஆனால், இந்த தொடரில் பாகிஸ்தான் அணியிடம் நீங்கள் எப்படி நடந்துகொண்டீர்கள் என்ற ஒரு கேள்வி இருக்கிறது.

முதலில் நீங்கள் கைகுலுக்கவில்லை. பிறகு கோப்பைக்கான புகைப்படம் எடுக்கவும் வரவில்லை, அதற்குப் பிறகு அரசியல் ரீதியாக ஒரு பத்திரிகையாளர் சந்திப்பையும் நீங்கள் நடத்தினீர்கள்.

கிரிக்கெட் வரலாற்றில் அரசியலை கொண்டு வந்த முதல் கேப்டன் நீங்கள்தான் என்று நினைக்கிறீர்களா?” என்று சூர்யகுமார் யாதவிடம் ஒரு பாகிஸ்தான் பத்திரிகையாளர் கேள்வி எழுப்பினார்.

“நீங்கள் பேச விரும்புகிறீர்களா இல்லையா. கோபம் வந்துவிட்டதா? உங்கள் கேள்வி எனக்குப் புரியவில்லை, நீங்கள் ஒரே நேரத்தில் நான்கு கேள்வி கேட்டுவிட்டீர்கள்” என்று சூர்யகுமார் யாதவ் ஒரு சிரிப்புடன் அந்தப் பத்திரிகையாளரிடம் கேட்டார்.

By admin