• Sat. Mar 1st, 2025

24×7 Live News

Apdin News

ஆதித்யா-1 விண்கலம் சூரியனின் ஒளி வெடிப்பை காட்சிப்படுத்தியதாக இஸ்ரோ தகவல் – டாப்5 செய்திகள்

Byadmin

Mar 1, 2025


இன்றைய செய்திகள், முக்கிய செய்திகள், தலைப்பு செய்திகள், செய்திகள்

பட மூலாதாரம், mayiladuthurai.nic.in

படக்குறிப்பு, பணியிட மாற்றம் செய்யப்பட்ட மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி

2025, மார்ச் 1-ஆம் தேதி தமிழ் நாளிதழ்கள் மற்றும் இணைய செய்தி ஊடகங்களில் வெளியான முக்கியச் செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.

மூன்றரை வயது குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதையடுத்து அவரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மயிலாடுதுறையில் மூன்றரை வயது குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட விவகாரத்தில் 16 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த மாவட்டத்தில் நேற்று நடந்த போக்சோ தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் ஒரு கருத்து தெரிவித்தார்.

கடந்த 24-ஆம் தேதி அங்கன்வாடிக்குச் சென்ற மூன்றரை வயது பெண் குழந்தை மீது நடத்தப்பட்ட பாலியல் வன்முறைக்கு அந்த குழந்தையே காரணம் என்று பேசியுள்ளார்.

By admin