• Wed. May 20th, 2026

24×7 Live News

Apdin News

ஆந்திராவில் போலீஸ் உடை அணிந்து பண மோசடி செய்த பெண்

Byadmin

May 20, 2026


ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் மத்தி நாயண பள்ளியை சேர்ந்தவர் சரஸ்வதி. இவரது கணவர் விவசாய வேலை செய்து வருகிறார். சரஸ்வதி தினமும் காலை எழுந்து தயாராகி போலீஸ் உடை அணிந்து வெளியே செல்வார்.

உறவினர்கள், நண்பர்கள் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போதும் போலீஸ் உடையில் செல்வது வழக்கம். இவர் அனந்தபூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் வேலை செய்வதாக கூறி அனைவரையும் நம்ப வைத்தார். சரஸ்வதியை பார்ப்பவர்கள் அவருக்கு போலீஸ் உடை என்றால் அதிக மரியாதை உள்ளதாக நினைத்தனர்.

ஆனால் அவர் தனது குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லை, தம்பியை அமெரிக்கா அனுப்ப வேண்டும் என கணவருடன் சேர்ந்து தெரிந்தவர்களிடம் எல்லாம் லட்சக்கணக்கில் கடன் வாங்கினார். கடனை திருப்பி கேட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதாக மிரட்டி வந்தார்.

By admin