• Thu. May 8th, 2025

24×7 Live News

Apdin News

ஆபரேஷன் சிந்தூர்: இந்திய தாக்குதல் பற்றி பாகிஸ்தான் தலைவர்கள் கூறுவது என்ன?

Byadmin

May 7, 2025


இந்திய தாக்குதல் குறித்து, பாகிஸ்தான் இந்தியா தலைவர்கள் என்ன கூறுகிறார்கள்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார்.

“பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக” இந்திய அரசு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மொத்தம் ஒன்பது இடங்கள் குறிவைக்கப்பட்டுள்ளன என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. “எங்கள் நடவடிக்கை கவனமிக்கது, அளவிடப்பட்டது மற்றும் ஆத்திரமூட்டாதது. பாகிஸ்தான் ராணுவ கட்டமைப்பு எதுவும் குறிவைக்கப்படவில்லை” என்று அந்த அறிக்கை கூறுகிறது.

ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழ்நிலை உருவானது. இந்தச் சூழலில் தற்போதைய தாக்குதல் நடந்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் தலைவர்கள் கூறுவது என்ன?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

‘பதிலடி கொடுக்க எல்லா உரிமையும் உண்டு’ – பாகிஸ்தான் பிரதமர்

இந்தியாவின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீஃப் எதிர்வினையாற்றியுள்ளார்.

By admin