• Sun. Oct 19th, 2025

24×7 Live News

Apdin News

ஆப்கன் கிரிக்கெட் வீரர்கள் கொல்லப்பட்டது குறித்த ஜெய் ஷாவின் கருத்தை பாகிஸ்தான் எதிர்ப்பது ஏன்?

Byadmin

Oct 19, 2025


ஜெய் ஷா(வலது) மற்றும் அதாவுல்லா தரார் (இடது)

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தாக்குதலை நிரூபிக்க ஜெய் ஷா(வலது) நம்பகமான எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை என அதாவுல்லா தரார் (இடது) கூறுகிறார்

ஆப்கானிஸ்தானில் ஆப்கன் கிரிக்கெட் வீரர்கள் மூன்று பேர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) அறிக்கை மீது பாகிஸ்தான் கடுமையான எதிர்வினையை வெளியிட்டுள்ளது.

“ஐசிசி மற்றும் அதன் தலைவர் ஜெய் ஷா ஆகியோரின் அறிக்கை பாகிஸ்தான் கிரிக்கெட்டைச் சேதப்படுத்துவதற்கான முயற்சி,” என பாகிஸ்தான் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அதாவுல்லா தரார் கூறியுள்ளார்.

கடந்த மாதம் ஆசியக் கோப்பையின்போது, பாகிதான் வீரர்களுக்கு இந்திய வீரர்கள் கைகுலுக்க மறுத்தனர். இந்த சர்ச்சையின் தொடர்ச்சியாகவே ஜெய் ஷாவின் அறிக்கையை அதாவுல்லா தரார் பார்க்கிறார்.

ஆப்கன் கிரிக்கெட் வீரர்களான கபீர் ஆகா, சிப்கத்துல்லா மற்றும் ஹாரூன் ஆகிய மூவரும் பாகிஸ்தானின் தாக்குதலில் கொல்லப்பட்டதாக, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (ACB) சமூக ஊடகங்களில் தகவல் தெரிவித்தது.



By admin