• Sun. Oct 12th, 2025

24×7 Live News

Apdin News

ஆப்கானிஸ்தானில் தாலிபன் அரசுடன் நெருங்குவதால் இந்தியாவுக்கு என்ன லாபம்? ஓர் அலசல்

Byadmin

Oct 12, 2025


ஆப்கானிஸ்தான், இந்தியா, தாலிபன், பாகிஸ்தான், சீனா, ஜெய்சங்கர், அமீர் கான் முத்தக்கி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தாலிபன் வெளியுறவு அமைச்சருடன் கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

    • எழுதியவர், அன்ஷுல் சிங்
    • பதவி, பிபிசி நிருபர்

2021-ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தாலிபன் ஆட்சிக்கு வந்த பிறகு அந்த நாட்டுடன் சீனா தனது தொடர்புகளை அதிகப்படுத்த தொடங்கியது. தற்போது இந்தியாவும் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக தாலிபனுடனான தொடர்புகளை இந்தியா அதிகரித்து வருகிறது, ஆனால் முதல் முறையாக தாலிபன் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தக்கி டெல்லிக்கு வந்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகள் பட்டியலில் முத்தக்கியும் உள்ளார்.

வெள்ளிக்கிழமை இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உடனான உயர்மட்ட கூட்டத்தில் முத்தக்கி கலந்து கொண்டார்.



By admin