• Mon. Jun 30th, 2025

24×7 Live News

Apdin News

ஆமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து: டிஜிசிஏ அறிக்கை குறித்து விமானிகள் கூறுவது என்ன?

Byadmin

Jun 30, 2025


ஆமதாபாத், குஜராத், ஏர் இந்தியா விபத்து, டிஜிசிஏ, விமானப் பாதுகாப்பு

பட மூலாதாரம், Getty Images

ஜூன் 26, 2025 அன்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) டெல்லி மற்றும் மும்பை உட்பட நாட்டில் உள்ள பல்வேறு முக்கிய விமான நிலையங்களை ஆய்வு செய்ததாகக் கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

ஜூன் 12 அன்று ஆமதாபாத்தில் நடத்த விமான விபத்திற்குப் பிறகு இந்தத் தணிக்கை தொடங்கியது.

அந்த அறிக்கையில் எந்த விமான நிலையம் அல்லது விமான நிறுவனத்தின் பெயரும் குறிப்பிடப்படவில்லை என்றாலும் இந்திய விமான நிலையங்களில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு விதிகளில் ஏற்பட்டுள்ள தவறுகள் மற்றும் மீறல்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஆமதாபாத் விமான விபத்துக்குப் பிறகு விமானத் துறையில் ஆய்வு மற்றும் விசாரணைக்கான தேவைகள் அதிகரித்துள்ளன.

By admin