• Thu. Jun 26th, 2025

24×7 Live News

Apdin News

ஆமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து : பாதிக்கப்பட்ட மருத்துவர்கள் எப்படி உள்ளார்கள்?

Byadmin

Jun 25, 2025


குஜராத், ஆமதாபாத், ஏர் இந்தியா விமான விபத்து, மருத்துவர்கள்

பட மூலாதாரம், Pavan Jaiswal/BBC

படக்குறிப்பு, ஆமதாபாத் விமான விபத்தில், மெஸ் ஹால் மற்றும் அதுல்யம் 3 மற்றும் 4 விடுதிகள் உட்பட பல கட்டடங்கள் இடிந்து விழுந்தன, இதில் நான்கு மருத்துவர்கள் உயிரிழந்தனர்.

ஆமதாபாத்தின் மெகானிநகரில் உள்ள காவல்துறை ஐஜி குவார்டர்ஸ் பகுதியில் அமைந்துள்ள விடுதி வளாகத்தில் நடைபெற்ற பெருந்துயரான ஏர் இந்தியா விமான விபத்தின் பின்விளைவுகளை பாதிக்கப்பட்டவர்கள் இன்னமும் உணர்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் பயிற்சி மருத்துவர்கள் மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்கள்.

இந்த பேரிடர், உணவுக் கூடம், அதுல்யம் 3 மற்றும் 4 ஆகிய விடுதிகள் உட்பட பல கட்டடங்களை அழித்தது. இதில் நான்கு மருத்துவர்கள் உயிரிழந்ததுடன், அங்கிருந்த மேலும் பலர் காயமடைந்தனர். சிலர் இந்த சம்பவத்தால் மனதளவில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த கொடூர விபத்தில் உயிர்பிழைத்தவர்கள் சுமார் 2.7 கோடி ரூபாய் மதிப்புள்ள உடைமைகளை இழந்ததாகவோ அல்லது திருடப்பட்டதாகவோ அதிர்ச்சியுடன் போராடி வருகின்றனர்.

அந்த விடுதி வளாகத்தில் தங்கியிருக்கும் மருத்துவர்களை பிபிசி குஜராத்தி அணுகியது. பல மருத்துவர்கள் பல்வேறு காரணங்களால் பேச மறுத்துவிட்டனர். ஆனால் பெயரை வெளியிட விரும்பாமல் குறைந்தது 10 மருத்துவர்கள் பிபிசி குஜராத்தியிடம் பேசினர்.

By admin