• Tue. Jun 17th, 2025

24×7 Live News

Apdin News

ஆமதாபாத் விமான விபத்து: ‘எங்கள் மகனுக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினோம், ஆனால்…’, அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்கள்

Byadmin

Jun 16, 2025


ஆமதாபாத் விமான விபத்து, ஏர் இந்தியா, குஜராத், லண்டன்
படக்குறிப்பு, விமான விபத்தில் உயிரிழந்த பாவிக்கின் தாத்தா, வார்த்தைகளற்று தவிக்கிறார்.

ஜூன் 12, வியாழக்கிழமை, ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஆமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நொடிகளில் விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த 242 பேரில் ஒரே ஒரு பயணியைத் தவிர மற்ற அனைவரும் உயிரிழந்தனர்.

விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் டிஎன்ஏ பரிசோதனைக்குப் பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும்.

இந்த விமான விபத்து பல குடும்பங்களை மீள முடியா அதிர்ச்சிக்கும் சோகத்திற்கும் உள்ளாக்கியுள்ளது. அன்புக்குரியவர்களை இழந்த சில குடும்பங்களுடன் பிபிசி பேசியதுடன், அவர்களின் துயரத்தையும் கேட்டறிந்தது.

அப்படிப்பட்ட ஒரு குடும்பம் குஜராத் மாநிலம், வதோதராவைச் சேர்ந்த பாவிக் மகேஸ்வரியின் குடும்பம். இந்தக் குடும்பம் தங்கள் இளம் மகனை விமான விபத்தில் இழந்துள்ளது. பாவிக் மகேஸ்வரி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பிபிஏ படிக்க லண்டனுக்குச் சென்றார். இரண்டு வருட படிப்பை முடித்த பிறகு, கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரு கால் சென்டரில் உதவி மேலாளராகப் பணிபுரிந்து வந்தார். ஜூன் 1 ஆம் தேதி, அவர் 15 நாள் விடுப்பில் வதோதரா வந்தார்.

By admin