• Mon. Jun 16th, 2025

24×7 Live News

Apdin News

ஆமதாபாத் விமான விபத்து: கருப்புப் பெட்டி மீட்பும் விடை தேடி காத்திருக்கும் உறவுகளும் – என்ன நடக்கிறது?

Byadmin

Jun 15, 2025


ஆமதாபாத் விமான விபத்து,  விமானத்தில் இருந்த 242 பேரில் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் உயிரிழந்தனர்.

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, கடந்த வியாழக்கிழமை ஆமதாபத்தில் இருந்து லண்டன் சென்ற விமானம், புறப்பட்ட 60 வினாடிகளுக்குள் குடியிருப்பு பகுதியில் மோதியதில் அந்த விமானத்தில் இருந்த 242 பேரில் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் உயிரிழந்தனர்.

  • எழுதியவர், லூசி கிளார்க்-பில்லிங்ஸ்
  • பதவி, பிபிசி செய்திகள்

ஆமதாபாத்தில் ஏர் இந்தியா விமான விபத்து நடந்த இடத்தில் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, இந்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு கிஞ்சராபு வெள்ளிக்கிழமையன்று தெரிவித்தார்.

இந்தியாவின் விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB) விபத்து நடந்த 28 மணி நேரத்துக்குள், விமானத்தின் தரவுகளைப் பதிவு செய்யும் கருவியான கருப்புப் பெட்டியை மீட்டெடுத்ததாக ராம் மோகன் நாயுடு கிஞ்சராபு உறுதிப்படுத்தினார்.

“[கருப்புப் பெட்டி மீட்பு] விசாரணையில் ஒரு முக்கியமான கட்டத்தைக் குறிக்கிறது”. இது இந்த பேரிடர் குறித்த “விசாரணைக்கும் கணிசமாக உதவும்” என்று கிஞ்சராபு கூறினார்.

கடந்த வியாழக்கிழமை ஆமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட 60 வினாடிகளுக்குள், விமானம் உயரத்தை இழந்து பிஜே மருத்துவக் கல்லூரி மற்றும் சிவில் மருத்துவமனையில் மருத்துவர் விடுதி கட்டடத்தின் மீது மோதியது.

By admin