ஆம்பூரில் பள்ளி மாணவர்களோடு தலைகீழாக கவிழ்ந்த ஆட்டோ – என்ன நடந்தது?
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூரில் ஆட்டோ ஒன்று கவிழ்ந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த ஆட்டோ தலைகீழாக கவிழ்ந்த தருணம் இது. உடனே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து வந்து விபத்துக்கு உள்ளான ஆட்டோவையும் அதில் பயணித்தவர்களையும் மீட்டனர். இந்த விபத்தில் உயிரிழப்பு ஏதுமில்லை.