0
இங்கிலாந்தில் மோசடியைத் தடுக்கும் நடவடிக்கை எனக் கூறி, ஆயிரக்கணக்கான பெற்றோருக்கான குழந்தை நல உதவித்தொகை (Child Benefit) வழங்கலை சுங்கத் துறை அதிகாரிகள் நிறுத்தியமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. His Majesty’s Revenue and Customs (HMRC) மேற்கொண்ட இந்த நடவடிக்கை, பல குடும்பங்களை திடீர் நிதி நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
உள்நாட்டுத் துறை வழங்கிய முழுமையற்ற மற்றும் அரைகுறை பயணத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, சுமார் 24,000 பேரின் Child Benefit கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், பாதிக்கப்பட்டவர்களில் 63 சதவீதத்திற்கும் அதிகமானோர் இன்னும் இங்கிலாந்திலேயே வசித்து வருவது தெரியவந்துள்ளது.
மேலும், பயன்படுத்தப்பட்ட தரவுகளில் பிழைகள் இருக்கக்கூடும் என்பது அதிகாரிகளுக்குத் தெரிந்திருந்த போதிலும், அந்த அபாயத்தை ‘சாதாரண அபாயம்’ எனக் கருதி நடவடிக்கை எடுத்ததாக உள்நாட்டு ஆவணங்கள் வெளிப்படுத்தியுள்ளன. இது அரசுத் துறைகளின் பொறுப்பற்ற அணுகுமுறையை காட்டுவதாக விமர்சகர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்க, HMRCயின் உயர் அதிகாரிகள், நாளை நாடாளுமன்றக் குழுவின் முன் ஆஜராக உள்ளனர். இந்த நடவடிக்கைக்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.