• Tue. Apr 1st, 2025

24×7 Live News

Apdin News

ஆர்எஸ்எஸ் நூறு ஆண்டுகள்: இந்திய அரசியலமைப்பு, தேசியக் கொடி, சாதி குறித்த நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா?

Byadmin

Mar 31, 2025


ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூறு ஆண்டுகள்: இந்திய அரசமைப்பு, தேசியக் கொடி, சாதி அமைப்பு தொடர்பாக மாறிவரும் நிலைப்பாடு

பட மூலாதாரம், Getty Images

இந்திய அரசியலமைப்பு, தேசியக் கொடி மற்றும் சாதி அமைப்பு பற்றிய ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) கருத்துகள் தொடர்ச்சியாக விமர்சனத்திற்கு உள்ளாகி வந்துள்ளன.

சுதந்திரத்திற்குப் பிறகு ஆர்எஸ்எஸ் இந்த மூன்று முக்கியமான விஷயங்கள் தொடர்பாகப் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல முறை தனது கருத்துகளை மாற்றியுள்ளது.

இந்திய அரசியலமைப்புடன் ஆர்எஸ்எஸ்-ன் உறவு மிகவும் சிக்கலானது.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் இரண்டாவது தலைவர் மாதவ் சதாசிவராவ் கோல்வால்கர், ‘பஞ்ச் ஆஃப் தாட்ஸ்’ என்ற தனது புகழ்பெற்ற புத்தகத்தில் “நமது அரசியலமைப்பு மேற்கத்திய நாடுகளின் பல்வேறு அரசியலமைப்புகளின் பல்வேறு பிரிவுகளின் சிக்கலான மற்றும் பன்முகத்தன்மை வாய்ந்த கலவை. அதில் நம்முடையது என்று சொல்லும் எதுவும் இல்லை. அதன் வழிகாட்டும் கொள்கைகளில் நமது தேசிய நோக்கம் என்ன, வாழ்வில் நமது முக்கிய நோக்கம் என்ன என்று சொல்லும் ஒரு குறிப்பாவது உள்ளதா? இல்லை!” என்று குறிப்பிடுகிறார்.

By admin