• Fri. Jun 6th, 2025

24×7 Live News

Apdin News

ஆர்சிபியின் 18 ஆண்டுகள் கனவு நனவானது -ஆனந்தக் கண்ணீரில் விராட் கோலி

Byadmin

Jun 4, 2025


காணொளிக் குறிப்பு,

ஆர்சிபியின் 18 ஆண்டுகள் கனவு நனவானது -ஆனந்தக் கண்ணீரில் விராட் கோலி

ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஆறு ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி கோப்பையைக் கைப்பற்றியது. 18 ஆண்டுகள் கழித்து முதல் கோப்பை வென்றது ஆர்.சி.பி.

ஐபிஎல் தொடங்கியது முதல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என்ற ஒரே அணியில் விளையாடிவரும், விராட் கோலிக்கு இது மறக்கமுடியாத ஒரு வெற்றியாகும்.

ஆர்சிபி பல வருடங்களாக தோல்விகளைச் சந்தித்து வந்தபோதும் அதன் ரசிகர்கள் குறையவில்லை, தொடர்ந்து அதிகரித்தவண்ணமே இருந்தனர். அவர்கள் இந்த வெற்றியை கொண்டாடிவருகின்றனர்.

முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில், 9 விக்கெட்டுகளை இழந்து, 190 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் பஞ்சாப் அணிக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

பஞ்சாப் அணி 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin