• Thu. Jun 5th, 2025

24×7 Live News

Apdin News

ஆர்சிபி vs பஞ்சாப் கிங்ஸ்: ஐபிஎல் 2025 கோப்பை யாருக்கு? இன்று என்ன நடக்கும்?

Byadmin

Jun 3, 2025


ஆர்சிபி vs பஞ்சாப் கிங்ஸ்: ஐபிஎல் 2025 சாம்பியன் பட்டத்தை வெல்லப் போவது யார்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் விராட் கோலி

மே 29ஆம் தேதி இரவு, சண்டிகர் மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

பெங்களூருவின் இந்த வெற்றிக்குப் பிறகு, முல்லன்பூர் மைதானத்தில் இரண்டு முக்கியமான சம்பவங்கள் நடந்தன.

ஒருபுறம், 18 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் வெற்றிக்காகப் போராடி வந்த விராட் கோலி, பார்வையாளர்களில் ஒருவராக அமர்ந்திருந்த அனுஷ்கா சர்மாவை பார்த்து, ‘இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற வேண்டும்’ என்று சூசகமாகக் கூறினார்.

மறுபுறம், போட்டியில் தோல்வியடைந்த பிறகு பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், “நாங்கள் ஒரு போரில் தோற்றுவிட்டோம், ஆனால் முழு போர் இன்னும் முடிவடையவில்லை” என்று கூறினார்.

By admin