• Tue. Apr 7th, 2026

24×7 Live News

Apdin News

ஆர்டெமிஸ் 2: பூமியுடன் 40 நிமிடங்கள் தொடர்பு துண்டிப்பு ஏன்? விண்வெளி வீரர்கள் என்ன செய்தனர்?

Byadmin

Apr 7, 2026


ஆர்டெமிஸ் 2-ல் உள்ள நான்கு விண்வெளி வீரர்கள்

பட மூலாதாரம், NASA

படக்குறிப்பு, ஆர்டெமிஸ் 2-ல் உள்ள நான்கு விண்வெளி வீரர்கள்

ஆர்டெமிஸ் 2-ல் பயணித்த விண்வெளி வீரர்களைத் தவிர வேறு எவருமே இதுவரை பூமியிலிருந்து இவ்வளவு தூரம் பயணம் செய்ததில்லை.

இந்திய நேரப்படி திங்கள்கிழமை இரவு 11:30 மணியளவில், ஆர்டெமிஸ் 2 குழுவினர் புதிய சாதனையைப் படைத்தனர். மனிதர்கள் பூமியிலிருந்து பயணம் செய்த மிக அதிக தூரம் என்ற சாதனையை அவர்கள் முறியடித்தனர்.

1970-ல் அபோல்லோ 13 குழுவினர் படைத்த 2,48,655 மைல்கள் (4,00,171 கிலோமீட்டர்) தூரம் என்ற சாதனையை ஆர்டெமிஸ் 2 குழுவினர் விஞ்சினர்.

சந்திரனின் பின்புறம் பயணம் செய்தபோது ஓரியன் விண்கலம் பூமியிலிருந்து அதிகபட்ச தூரத்தை அடைந்தது. இது 2,52,756 மைல்கள் (4,06,771 கிலோமீட்டர்) என்ற சாதனை தூரத்தை எட்டியது.

ஓரியன் விண்கலம் நிலவின் பின்புறம் சென்றபோது, பூமியில் உள்ள நாசா மையத்துடனான தொடர்பை இழந்தது. சுமார் 40 நிமிடங்களுக்கு இந்தத் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

By admin