• Fri. May 30th, 2025

24×7 Live News

Apdin News

ஆழ்கடலில் கூட்டு நடவடிக்கையின்போது அதிக போதைப்பொருள்கள் மீட்பு! – 11 பேர் கைது (படங்கள் இணைப்பு)

Byadmin

May 29, 2025


இலங்கையின் தெற்கு ஆழ்கடலில் பெருமளவிலான போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதனைக் கடத்திய இரண்டு மீன்பிடிப் படகுகளுடன் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கைக் கடற்படையினர் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மாத்தறை, தெவுந்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

சந்தேகநபர்களிடமிருந்து 450 கிலோகிராம் ஐஸ் மற்றும் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கைக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இந்த இரண்டு மீன்பிடிப் படகுகளும் திக்கோவிட்ட துறைமுகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

The post ஆழ்கடலில் கூட்டு நடவடிக்கையின்போது அதிக போதைப்பொருள்கள் மீட்பு! – 11 பேர் கைது (படங்கள் இணைப்பு) appeared first on Vanakkam London.

By admin