• Tue. Dec 16th, 2025

24×7 Live News

Apdin News

ஆஸ்திரேலிய துப்பாக்கிச் சூடு: சஜித் அக்ரம் ‘இந்திய பாஸ்போர்ட்டில் பிலிப்பின்ஸ் சென்றார்’ என கூறும் அதிகாரிகள்

Byadmin

Dec 16, 2025


உயிரிழ்ந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் மக்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் மக்கள்

சிட்னியின் பிரபலமான போன்டை கடற்கரையில் நடைபெற்ற யூதர்களின் நிகழ்வின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடந்து இரண்டு நாட்களாகியும், இது தொடர்பான பல கேள்விகள் உள்ளன.

இந்த நிலையில், தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் இரண்டு நபர்களும் நவம்பர் மாதம் பிலிப்பின்ஸுக்கு வந்ததாக பிலிப்பின்ஸ் குடிவரவுப் பணியகம் தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை ஆஸ்திரேலிய காவல்துறை தற்போது விசாரித்து வருகிறது.

தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரான சஜித் அக்ரம் இந்திய கடவுச்சீட்டைப் பயன்படுத்தி தங்கள் நாட்டுக்குப் பயணம் செய்ததாகவும், அவரது மகன் நவித் ஆஸ்திரேலிய கடவுச்சீட்டில் பிலிப்பின்ஸுக்கு வந்ததாகவும் பிலிப்பின்ஸ் அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

சிட்னியில் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் இரண்டு துப்பாக்கி ஏந்திய நபர்கள், நவம்பர் 1ஆம் தேதி பிலிப்பின்ஸுக்கு வந்து, நவம்பர் 28ஆம் தேதி திரும்பிச் சென்றனர் என்று பிலிப்பின்ஸ் குடிவரவுப் பணியகம் பிபிசியிடம் தெரிவித்துள்ளது.

குடிவரவுப் பணியகத்தின் செய்தித் தொடர்பாளர் டானா சாண்டோவால் கூற்றுப்படி, 50 வயதான சஜித் அக்ரம் இந்திய கடவுச்சீட்டிலும், அவரது 24 வயது மகன் நவித் ஆஸ்திரேலிய கடவுச்சீட்டிலும் பயணித்துள்ளனர்.

By admin