• Sun. Nov 9th, 2025

24×7 Live News

Apdin News

ஆஸ்திரேலிய T20 தொடர்: இந்திய அணி கற்றதும் பெற்றதும்

Byadmin

Nov 9, 2025


இந்தியா - ஆஸ்திரேலியா - கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை வென்றிருக்கிறது இந்திய அணி. 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி மற்றும் கடைசிப் போட்டி மழையால் கைவிடப்பட, 2-1 என தொடரை வென்றது சூர்யகுமார் யாதவின் அணி.

ஹோபர்ட்டில் மூன்றாவது போட்டியில் 186 ரன்களை சிரமம் இல்லாமல் சேஸ் செய்த இந்தியா, கோல்ட் கோஸ்ட்டில் நடந்த நான்காவது போட்டியில் 49 ரன்களில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டிகளில் பேட்டிங், பௌலிங் இரண்டு பிரிவும் சிறப்பாக செயல்பட்டிருந்தன. மெல்போர்னில் இந்தியா தோற்றபோது, பேட்டிங், பௌலிங் இரண்டிலுமே ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்தியிருந்தது.

இந்தத் தொடரில் நிறைய வீரர்களை, நிறைய காம்பினேஷன்களை இந்திய அணி முயற்சி செய்து பார்த்தது. பலதரப்பட்ட திறன் கொண்ட வீரர்கள் நல்ல பங்களிப்பைக் கொடுத்தது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக இந்திய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்தார்.

“வெவ்வேறு திறமைகள் கொண்ட வீரர்களை அணியில் கொண்டிருப்பது என்னுடைய அதிர்ஷ்டம். எல்லோரும் ஒவ்வொரு திறனை அணிக்குக் கொடுக்கிறார்கள். அவர்கள் அணிக்கு நல்ல உத்வேகத்தைக் கொண்டுவருகிறார்கள். அவர்கள் ஒன்றாக மைதானத்துக்குள் போவதை மக்கள் ரசிக்கிறார்கள்” என்றார் சூர்யா.

திருப்தியளிக்கும் பேட்டிங்

இந்திய அணியின் பேட்டிங் தனக்கு ரொம்பவும் திருப்தியளிப்பதாகக் கூறினார் சூர்யகுமார் யாதவ்.

By admin