• Mon. Aug 25th, 2025

24×7 Live News

Apdin News

இங்கிலாந்து முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தயாராகும் பஸ் ஓட்டுநர்கள்

Byadmin

Aug 25, 2025


இங்கிலாந்து முழுவதும் சுமார் 7,500 பஸ் ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம் அல்லது தொழில்துறை நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிர்கன்ஹெட், பிரைட்டன், பிரிஸ்டல், கார்டிஃப், கோர்லி, இலண்டன், மான்செஸ்டர், நியூகேஸில், பிரஸ்டன், ஸ்டோக் மற்றும் ஸ்விண்டன் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 7,500 உறுப்பினர்கள் வேலைநிறுத்தம் செய்ய தயாராகி உள்ளனர்.

அத்துடன், மேற்கு இலண்டனில் 2,000 ஊழியர்கள், பிரிஸ்டலில் 550 முதல் பேர், 450 கார்டிஃப் பஸ் ஊழியர்கள் மற்றும் ஸ்விண்டனில் 70 கோ சவுத் வெஸ்ட் ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்யவுள்ளதாக ஏற்கெனவே அறிவித்துள்ளனர்.

அத்துடன், வரும் வாரங்களில் ஆயிரக்கணக்கான பஸ் ஊழியர்கள் பங்கேற்கும் மேலும் வேலைநிறுத்தங்கள் ஏனைய நகரங்களில் திட்டமிடப்பட்டுள்ளன.

“எல்லா இடங்களிலும் உள்ள பஸ்களின் முதலாளிகள் இந்த செய்தியை சத்தமாகவும் தெளிவாகவும் புரிந்துகொள்ள வேண்டும்” என, யுனைட் பொதுச் செயலாளர் ஷரோன் கிரஹாம் கூறியுள்ளார்.

பஸ் ஓட்டுநர்கள் பணியிடத்தில் துஷ்பிரயோகத்தை எதிர்கொள்வதாக யுனைட் முன்பு தெரிவித்திருந்தது. மேலும், சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சோர்வைக் குறைக்க ஓய்வு இடைவேளைகள், கழிப்பறை வசதிகள் மற்றும் ஷிப்ட் முறைகளை மேம்படுத்தவும் தொழிற்சங்கம் பிரசாரம் செய்து வருகிறது.

வேலையின் மன அழுத்தம் நிறைந்த தன்மை காரணமாக, ஏனைய தொழில்களை விட பஸ் ஓட்டுநர்கள் மன மற்றும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

2023 முதல் யுனைட் 42,626 தொழிலாளர்களை உள்ளடக்கிய 167 பஸ் தகராறுகளை சந்தித்துள்ளதாகக் கூறியுள்ளது.

By admin