• Fri. Dec 26th, 2025

24×7 Live News

Apdin News

இண்டிகோ நெருக்கடி எதிரொலி: 3 புதிய விமான நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ள மத்திய அரசு

Byadmin

Dec 26, 2025


டிசம்பர் 2025 தொடக்கத்தில், ஆயிரக்கணக்கான இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டிசம்பர் 2025 தொடக்கத்தில், ஆயிரக்கணக்கான இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன, அதனைத் தொடர்ந்து இந்திய விமான நிலையங்கள் முழுவதும் குழப்பம் பரவியது.

இண்டிகோ ஏர்லைன்ஸ் நெருக்கடி ஏற்பட்டு கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்குப் பிறகு, மூன்று புதிய விமான நிறுவனங்களுக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த மூன்று நிறுவனங்களும் தங்களது செயல்பாடுகளைத் தொடங்கத் தயாராகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் விமானச் சேவையைத் தொடங்க விரும்பும் ‘ஷாங்க் ஏர்’ (Shankh Air), ‘அல் ஹிந்த்’ (Al Hind) மற்றும் ‘பிளை எக்ஸ்பிரஸ்’ (Fly Express) ஆகிய நிறுவனங்களின் குழுக்களை கடந்த ஒரு வாரத்தில் சந்தித்ததாக சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு சமூக வலைதளப் பதிவின் மூலம் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் மாதத் தொடக்கத்தில், இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ, பெரும் திட்டமிடல் நெருக்கடியில் சிக்கியது.

இதன் காரணமாக ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் ஏராளமான பயணிகள் தவிப்புக்குள்ளானதோடு, நாட்டின் முக்கிய விமான நிலையங்களில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

By admin