• Thu. Oct 9th, 2025

24×7 Live News

Apdin News

இந்தியாவால் அங்கீகரிக்கப்படாத தாலிபன் அரசின் அமைச்சர் இந்தியா வருவது ஏன்?

Byadmin

Oct 9, 2025


ஆப்கானிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் அமீர் கான் முத்தாக்கி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2021 ஆம் ஆண்டு தாலிபன்கள் ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு வெளியுறவுத்துறை அமைச்சர் முதல் முறையாக இந்தியாவுக்கு வருகை தருகிறார்.

ஆப்கானிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் அமீர் கான் முத்தாக்கி அக்டோபர் 9-ஆம் தேதி முதல் அக்டோபர் 16-ஆம் தேதி வரை எட்டு நாள் பயணமாக இந்தியா வர உள்ளார்.

முத்தாக்கியின் வருகையை உறுதிப்படுத்திய இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், முத்தாக்கி இந்தியாவுக்கு வர, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் குழு அக்டோபர் 3-ஆம் தேதி அனுமதி அளித்ததாகக் கூறியிருந்தார்.

முத்தாக்கி, ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு கவுன்சின் தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகள் பட்டியலில் உள்ளார். அதனால்தான் அவர் இந்தியாவுக்குச் செல்ல சிறப்பு அனுமதி பெற வேண்டியிருந்தது.

பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமர் அக்டோபர் 8-ஆம் தேதி இரண்டு நாள் பயணமாக மும்பைக்கு வந்துள்ள வேளையில், முத்தாக்கியும் வர உள்ளார்.

By admin