• Mon. Apr 28th, 2025

24×7 Live News

Apdin News

இந்தியாவின் அடுத்த நடவடிக்கை என்ன? பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவமா அல்லது வேறு தந்திரமா?

Byadmin

Apr 28, 2025


இந்தியா, பாகிஸ்தான், பஹல்காம் தாக்குதல், ராஜாங்க நடவடிக்கைகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள்

ஏப்ரல் 22 அன்று, பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.

இந்தக் கொடூரமான தாக்குதல், ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா மீண்டு வந்துக் கொண்டிருந்த சமயத்தில் நடைபெற்றுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் மீது குற்றம்சாட்டிய இந்தியா, இரு நாடுகளுக்கும் இடையிலான சிந்து நதிநீர் உடன்படிக்கையை இடைநிறுத்தி வைத்ததுடன், அட்டாரி-வாகா எல்லையை மூடியது.

இரு நாட்டு தூதரகங்களில் பணியாற்றிய அதிகாரிகளின் எண்ணிக்கையிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன. மேலும், இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தான் குடிமக்கள் 48 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

By admin