• Fri. Jan 2nd, 2026

24×7 Live News

Apdin News

இந்தியாவின் தூய்மையான நகரம் இந்தூரில் மாசடைந்த தண்ணீரால் பலர் உயிரிழப்பு – கள நிலவரம் என்ன?

Byadmin

Jan 2, 2026


 முதலமைச்சர் மோகன் யாதவ்

பட மூலாதாரம், SAMEER KHAN

படக்குறிப்பு, மாசுபட்ட தண்ணீரால் பாதிக்கப்பட்ட மக்களின் உடல் நலன் குறித்து விசாரிக்க முதலமைச்சர் மோகன் யாதவ் மருத்துவமனைக்குச் சென்றார்.

நாட்டின் தூய்மையான நகராக தொடர்ந்து 7 ஆண்டுகளாக தேர்வாகிவரும் வரும் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் நகரத்தின் பகீரத்புரா பகுதியில், நர்மதா நதி நீர் விநியோகக் குழாயில் கழிவுநீர் கலந்ததால் குடிநீர் மாசுபட்டது.

இந்தோர் நகரின் இந்தப் பகுதியில் குடிநீர் மாசு காரணமாக இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, மாநில அரசு அமைச்சர் கைலாஷ் விஜயவர்கியா 8 முதல் 9 மரணங்கள் ஏற்பட்டுள்ளன என்று இன்று கூறினார்.

இந்த விவகாரத்தை விசாரிக்க மாநில அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது.

மாசுபட்ட நீரினால் உடல்நலம் பாதிக்கப்பட்ட பல நபர்கள் பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் பத்து நாட்களுக்கு மேலாகியும், பகீரத்புராவின் அனைத்துப் பகுதிகளுக்கும் இன்னும் சுத்தமான குடிநீர் சென்றடையவில்லை. அதேபோல், இந்தூர் நகராட்சியால் இந்த மாசுபட்ட நீர் எங்கே விநியோகக் குழாயில் கலந்தது என்பதைக் கண்டறிய முடியவில்லை.

By admin