• Sat. Mar 28th, 2026

24×7 Live News

Apdin News

‘இந்தியாவின் மூலோபாய எண்ணெய் இருப்பு’ – நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாக அரசு விளக்கம்

Byadmin

Mar 28, 2026


இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், எண்ணெய் சந்தை, மூலோபாய எண்ணெய் இருப்பு, இந்தியா

பட மூலாதாரம், Abeer Khan/Bloomberg via Getty Images

படக்குறிப்பு, நாட்டில் போதுமான அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளது என பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார் (குறியீட்டுப் படம்).

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இந்தியாவின் மூலோபாய எண்ணெய் இருப்பு ஐந்து நாட்களுக்கான தேவையை மட்டுமே பூர்த்தி செய்யக்கூடிய நிலையில் உள்ளன; அவற்றின் மொத்த கொள்ளளவில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமான பகுதி காலியாக உள்ளது என்று பிபிசி ஆய்வு கூறுகிறது.

2025 ஆம் ஆண்டு இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தச் சேமிப்பு வசதிகள் பல ஆண்டுகளாக முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை.

எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் என்ற அச்சம் பல இந்திய நகரங்களில் பீதியுடன் பொருட்களை வாங்க வழிவகுத்துள்ளது, அதே வேளையில் பெட்ரோல் மற்றும் டீசல் போதுமான அளவு கையிருப்பில் இருப்பதாக மத்திய அரசு கூறுகிறது.

மாநிலங்களவையில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோதி, இந்தியாவிடம் போதுமான கச்சா எண்ணெய் இருப்பு இருப்பதாக உறுதியளித்தார். இந்தியா தனது கச்சா எண்ணெய் இறக்குமதியைப் பன்முகப்படுத்தியுள்ளதாகவும், நெருக்கடியைச் சமாளிக்கச் சேமிப்பிற்கு முன்னுரிமை அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இருப்பினும், இந்த வாரம் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி மாநிலங்களவையில் கூறுகையில், இந்தியாவின் கச்சா எண்ணெய் இருப்பு அதன் மொத்த கொள்ளளவில் சுமார் 64% மட்டுமே என்று தெரிவித்தார்.

By admin