• Tue. Jan 13th, 2026

24×7 Live News

Apdin News

இந்தியாவின் வரலாறு குறித்து அஜித் தோவல் கூறிய கருத்து விவாதத்தை தூண்டியது ஏன்?

Byadmin

Jan 13, 2026


அஜித் தோவல்

பட மூலாதாரம், ANI

‘வரலாற்றில் நடந்தவற்றுக்காக நாம் பழி வாங்க வேண்டும்’ என்ற இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் கருத்து சமூக வலைத்தளங்களின் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.

“வரலாறு நமக்கு சவால் விடுகிறது. ஒவ்வொரு இளைஞருக்குள்ளும் அந்த தீப்பொறி இருக்க வேண்டும். ‘பழிவாங்குதல்’ என்பது சிறந்த வார்த்தை அல்ல, அனால் பழிவாங்குதல் என்பது ஒரு வலிமையான சக்தி. நமது வரலாற்றில் நிகழ்ந்தவற்றுக்காக நாம் பழிவாங்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர்கள் அவரின் கருத்தை கண்டித்தனர். ஆனால் பாஜக தலைவர்கள் உட்பட சிலர் அஜித் தோவலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.

ஜம்மு – காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெஹபூபா முஃப்தி தோவலின் கருத்தை ‘துரதிர்ஷ்டவசமானது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

மெஹபூபா முஃப்தி

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, முக்கிய பொறுப்பில் உள்ள அஜித் தோவல் போன்ற அதிகாரியின் இத்தகைய கருத்து துரதிர்ஷ்டவசமானது என மெஹபூபா முஃப்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “முக்கிய பொறுப்பில் உள்ள அஜித் தோவல் போன்ற அதிகாரியின் இத்தகைய கருத்து துரதிர்ஷ்டவசமானது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தீய சக்திகளிடமிருந்து நாட்டை பாதுகாக்க வேண்டிய கடமை உள்ள அவர், வெறுப்பு என்ற வகுப்புவாத சித்தாந்தத்தின் மூலம் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறையை இயல்பாக்கியுள்ளார்.” எனத் தெரிவித்துள்ளார்.

By admin