• Fri. Dec 26th, 2025

24×7 Live News

Apdin News

இந்தியாவில் ஏஐ துறை வளர்ந்து வருவதால் ஐடி துறைக்கு என்ன பாதிப்பு?

Byadmin

Dec 26, 2025


மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சத்யா நாதெல்லா, ஆசியாவில் தனது நிறுவனத்தின் மிகப்பெரிய முதலீடான 17.5 பில்லியன் டாலர் (13.14 பில்லியன் பவுண்ட்) செலவிடப்படுவதாக அறிவித்தார். இது "இந்தியாவின் ஏஐ -முதன்மை எதிர்காலத்திற்குத் தேவையான அமைப்பு, திறன்கள் மற்றும் இறையாண்மைத் திறன்களை உருவாக்க உதவும்" என்று அவர் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், NurPhoto via Getty Images)

படக்குறிப்பு, உலகளாவிய ஏஐ பபிளுக்கு எதிராக இந்தியா ஒரு பாதுகாப்பாக உள்ளது என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர்.

டிசம்பர் தொடக்கத்தில், தொழில்நுட்ப நிறுவனங்களான அமேசான், மைக்ரோசாஃப்ட் ஆகியவை இந்தியாவில் 50 பில்லியன் டாலருக்கு மேல் முதலீடு செய்யப் போவதாக அறிவித்தன. இந்த அறிவிப்பு செயற்கை நுண்ணறிவுத் துறை மீது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சத்ய நாதெல்லா, ஆசியாவில் தனது நிறுவனம் இதுவரை செய்ததிலேயே மிகப்பெரிய முதலீடான 17.5 பில்லியன் டாலரை செலவிடப்போவதாக அறிவித்தார். இது “இந்தியாவின் ஏஐ-முதன்மை எதிர்காலத்திற்குத் தேவையான கட்டமைப்பு, திறன்கள் மற்றும் இறையாண்மைத் திறன்களை உருவாக்க உதவும்” என்று அவர் குறிப்பிட்டார்.

அமேசானும் இதே அணுகுமுறையைப் பின்பற்றி, 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 35 பில்லியன் டாலருக்கும் அதிகமாக முதலீடு செய்விருப்பதாகவும், அந்த முதலீட்டில் ஒரு பகுதி ஏஐ திறன்களை மேம்படுத்துவதற்காகச் செலவிடப்படும் என்றும் கூறியது.

இந்த அறிவிப்புகள் ஒரு முக்கியமான தருணத்தில் வெளிவந்தன. உலகளாவிய சந்தைகளை ‘AI பப்பிள்’ (AI bubble) பற்றிய அச்சம் சூழ்ந்திருக்க, பல முன்னணி பங்கு நிறுவனங்கள் இந்தியாவின் ஏஐ தொழில்நுட்பத்தை அதற்கு நேர்மாறான கோணத்தில் அணுகுகின்றன.

ஜெஃப்ரிஸின் கிறிஸ்டோபர் வூட், நாட்டின் பங்குகள் ஒரு “தலைகீழ் ஏஐ வர்த்தகம்” என்று கூறினார். அதாவது, “உலகளாவிய ஏஐ பப்பிள் திடீரென்று வெடித்தால்”, இந்திய பங்குகள் உலகின் பிற சந்தைகளைவிட மேம்பட்ட செயல்திறனைக் காட்டும் வாய்ப்புள்ளது என்பதே இதன் அடிப்படை அர்த்தம்.

By admin