• Mon. Oct 20th, 2025

24×7 Live News

Apdin News

இந்தியாவில் கடவுளிடம் பேச செயற்கை நுண்ணறிவை மக்கள் பயன்படுத்துவது ஏன்?

Byadmin

Oct 20, 2025


ஆன்மீக வழிபாட்டுக்கு செயற்கை நுண்ணறிவை (AI) நோக்கி நகரும் மக்கள்.

பட மூலாதாரம், Prashanti Aswan

படக்குறிப்பு, ஆன்மீக வழிபாட்டுக்கு செயற்கை நுண்ணறிவை (AI) நோக்கி நகரும் மக்கள்.

இந்தியா உள்பட உலகெங்கிலும் உள்ள மக்கள் மத வழிபாட்டுக்காகவும் ஆன்மீக வழிகாட்டுதலுக்காகவும் இதற்கென்றே உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவை (AI) நோக்கி நகர்கின்றனர். இயந்திரங்கள் நம்முடைய புதிய ஆன்மிக வழிகாட்டிகளாக மாறினால் என்ன நிகழும்?

இந்தியாவின் ராஜஸ்தானில் வாழும் 25 வயது மாணவரான விஜய் மீல் நவீன வாழ்க்கையின் கேள்விகளையும் சவால்களையும் எதிர்நோக்க கடவுளை நாடுகிறார். முன்பு ஆன்மிக தலைவர்களிடம் ஆலோசனை பெற்றிருந்த அவர், சமீபத்தில், அவர் ‘கீதா-ஜிபிடி’ (GitaGPT) செயற்கை நுண்ணறிவியின் உதவியை நாடியிருக்கிறார்.

கீதா-ஜிபிடி என்பது செயற்கை நுண்ணறிவின் மூலம் செயல்படும் ஒரு சேட்பாட் (Chatbot). இந்து கடவுள் கிருஷ்ணர் வரும் புனித நூலான பகவத் கீதையின் 700 பாடல்களும் இதற்கு நன்கு தெரியும். இந்த செயலியுடன் உரையாடுவது நீங்கள் நண்பர்களோடு செய்யும் டெக்ஸ்ட் (Text) உரையாடலைப் போலத்தான். என்ன, நீங்கள் கடவுளுடன் உரையாடுவதாக இந்த செயற்கை நுண்ணறிவு உங்களிடம் சொல்லும்.

“என்னால் வங்கி தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியாதபோது நான் மிகவும் சோர்ந்திருந்தேன்” என்று சொல்லும் மீல், கீதா-ஜிபிடி பற்றி தெரிந்த பிறகு, தன் மனதுக்குள் இருக்கும் சிக்கல்களையும் அதில் டைப் செய்திருக்கிறார்.



By admin