• Sun. Mar 22nd, 2026

24×7 Live News

Apdin News

இந்தியாவில் கல்வி பயின்றோர் எண்ணிக்கை அதிகம் இருந்தும் வேலையின்மை பிரச்னை இருப்பது ஏன்?

Byadmin

Mar 22, 2026


இந்தியாவில் கல்வி பயின்றோர் எண்ணிக்கை அதிகம் இருந்தும் வேலையின்மை பிரச்னை இருப்பது ஏன்?

பட மூலாதாரம், Hindustan Times via Getty Images

படக்குறிப்பு, கடந்த 2019ஆம் ஆண்டில், டெல்லியில் வேலையின்மைக்கு எதிராக நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் போராட்டம் ஒன்றில் பங்கேற்ற இளைஞர்

இந்திய இளைஞர்களின் நிலை பல முரண்பாடுகளால் நிரம்பியுள்ளது. ஒரு புறம் அதிகமான மனித வளம்; மறுபுறம் பற்றாக்குறை. ஒரு புறம் நம்பிக்கை; மறுபுறம் திசைதவறல்.

பிரிட்டிஷ் பொருளாதார நிபுணர் ஜோன் ராபின்சன் ஒருமுறை கூறியதைப் போல, “இந்தியாவை பற்றி நீங்கள் எதைச் சரியாகக் கூறினாலும், அதற்கு நேர்மாறான கருத்தும் உண்மையானதாகவே இருக்கும்.”

அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள சமீபத்திய “பணியாற்றும் இந்தியாவின் நிலை” குறித்த அறிக்கையைப் போல, மிகச் சில ஆய்வுகளே இந்த முரண்பாட்டை தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றன.

முதலாவதாக, ஒரு முக்கியமான புள்ளிவிவரத்தை நாம் கவனிக்க வேண்டும். இந்தியாவில் 15 முதல் 29 வயதுக்கு உட்பட்ட 367 மில்லியன் இளைஞர்கள் உள்ளனர். இதுவே உலகின் மிகப்பெரிய இளைஞர் மக்கள் தொகையாகும். மேலும், இந்தியாவின் உழைக்கும் வயதுடைய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு இவர்களாகவே உள்ளனர்.

நாட்டிலுள்ள 367 மில்லியன் இளைஞர்களில், 263 மில்லியன் பேர் தற்போது பள்ளி அல்லது கல்லூரிகளில் பயிலவில்லை. எனவே, இவர்கள் தற்போது பணிகளில் ஈடுபடக்கூடிய அல்லது விரைவில் வேலைவாய்ப்புகளில் இணையக்கூடிய குழுவினராக உள்ளனர். இதனாலேயே இவர்கள் “சாத்தியமான பணியாளர் வளம்” (potential workforce) என்று அழைக்கப்படுகிறார்கள்.

By admin