• Tue. May 19th, 2026

24×7 Live News

Apdin News

இந்தியாவில் சிக்கனத்தை வலியுறுத்தும் மோதி – பொருளாதார நெருக்கடியை உருவாக்குமா?

Byadmin

May 18, 2026


அந்நியச் செலாவணி கையிருப்பு, பணவீக்கம், பிரதமர் நரேந்திர மோதி, ஹோர்முஸ் நீரிணை, எண்ணெய் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு, சமையல் எரிவாயு சிலிண்டர், பெட்ரோல் விலை, டீசல் விலை, அமெரிக்க டாலர்

பட மூலாதாரம், AFP via Getty Images

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

இரான் மீதான போர் தொடங்கியபோது, அது நீண்ட நாட்களுக்கு நீடித்தால் உலகெங்கிலும் பொருட்களின் விலைகள் உயரும் என்றும், பணவீக்கம் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுக்கும் என்றும் பல நிபுணர்கள் கருதினர்.

ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டதில் இருந்தே, இந்தியாவிலும் எண்ணெய் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சம் நிலவி வந்தது.

இந்தநிலையில் சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோதி திடீரென நாட்டு மக்களுக்கு ஓர் வேண்டுகோளை விடுத்தார். அவர் அதில் விடுத்த கோரிக்கைகள் இவை தான்:

  • பெட்ரோல் மற்றும் டீசல் நுகர்வைக் குறைக்க வேண்டும்.
  • பொதுப் போக்குவரத்தையே அதிகமாக பயன்படுத்த வேண்டும்.
  • தேவையற்ற வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.
  • ஓராண்டிற்கு தங்கம் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
  • வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
  • விவசாயிகள் ரசாயன உரங்களின் பயன்பாட்டை 50 சதவீதம் வரை குறைக்க வேண்டும்.

பிரதமரின் இந்த கோரிக்கை, இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள ஏதோவொரு பெரிய நெருக்கடியைச் சுட்டிக்காட்டுவதாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

இரான் மீதான தாக்குதல் தொடங்கிய சமயத்தில் அமெரிக்க டாலருக்கு எதிராக சுமார் 91 என்ற நிலையில் இருந்த இந்திய ரூபாய், தற்போது 95 ரூபாய்க்கும் கீழே சென்றுள்ளது.

By admin