• Mon. Dec 29th, 2025

24×7 Live News

Apdin News

இந்தியாவில் சூரிய மின்சக்தி அதிகரிப்பால் முளைத்துள்ள புதிய அச்சுறுத்தல் என்ன?

Byadmin

Dec 29, 2025


இந்தியாவின் சூரிய மின்சக்தி கனவுகளுக்கு சோலார் பேனல் கழிவுகள் தடையாக இருக்கிறதா?

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, இந்தியா முழுவதும் ஆண்டு முழுவதும் ஏராளமான சூரிய ஒளி கிடைப்பதால், சூரிய சக்தி மிகவும் திறன் வாய்ந்ததாக இருக்கிறது.

இந்தியாவின் சூரிய மின்சக்தி பயன்பாடு அதிகரிப்பு மிகவும் வெற்றிகரமானது என பரவலாக பாராட்டப்படுகிறது. ஆனால் அதனால் உருவாகும் கழிவுகளை நிர்வகிப்பதற்கான திட்டம் ஏதும் இல்லாமல் இந்த மாற்றம் எவ்வளவு சிறப்பானதாக இருக்கும்?

வெறும் பத்தாண்டுகளிலேயே உலகிலேயே சூரிய ஆற்றலை அதிக அளவில் உற்பத்தி செய்யும் மூன்றாவது மிகப்பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. அதன் காலநிலை கொள்கையின் மையமாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளது. சூரிய மின்சக்தி பூங்காக்கள் முதல் வீட்டு மாடியில் அமைக்கும் நீல நிறத்திலான சோலார் பேனல்கள் வரை நகரங்கள், சிறுநகரங்கள் மற்றும் கிராமங்கள் என எல்லா பகுதிகளிலும் காணப்படுகின்றன.

பெரிய சூரிய மின்சக்தி பூங்காக்களுடன் தற்போது பல லட்சக்கணக்கான வீட்டின் மேற்கூரையில் அமைக்கப்படும் சோலார் பேனல்களும் மின்கட்டமைப்புகளுக்கு மின்சாரத்தை வழங்குகின்றன.

சூரிய மின்சக்தி துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி இந்தியா நிலக்கரியை சார்ந்திருப்பதை குறைத்துள்ளது. இந்தியாவின் மின்சார உற்பத்தியில் அனல் மற்றும் பிற புதுப்பிக்க முடியாத ஆற்றல் மூலங்கள் இன்னும் பாதிக்கும் மேல் பங்களிக்கின்றன. சூரிய மின்சக்தி 20 சதவிகிதத்திற்கும் மேல் பங்களிக்கிறது. எனினும், இந்த சாதனையில் சவாலும் சேர்ந்தே இருக்கிறது: சூரிய மின்சக்தி பயன்பாடு தூய்மையானதாக இருந்தாலும், சோலார் பேனல்களை சரிவர கையாளாவிட்டால் சூழலியல் ஆபத்துகள் வரக்கூடும்.

இந்தியாவின் சூரிய மின்சக்தி கனவுகளுக்கு சோலார் பேனல் கழிவுகள் தடையாக இருக்கிறதா?

பட மூலாதாரம், Bloomberg via Getty Images

படக்குறிப்பு, இந்தியாவின் மின் உற்பத்தியில் அனல் மின் நிலையங்களே தொடர்ந்து அதிக பங்களிப்பை அளிக்கின்றன.

சோலார் பேனல்கள் பெரும்பாலும் மறுசுழற்சி செய்யப்படக் கூடியவையாகவே உள்ளன. கண்ணாடி, அலுமினியம், சில்வர் மற்றும் பாலிமர் ஆகியவற்றாலேயே இவை தயாரிக்கப்படுகின்றன. ஆனால், ஈயம் மற்றும் காட்மியம் போன்ற மிகச்சிறிய அளவிலான நச்சு உலோகங்கள் தவறாக கையாளப்பட்டால் நிலம் மற்றும் நீரை மாசுபடுத்தலாம்.

By admin