• Sun. Nov 9th, 2025

24×7 Live News

Apdin News

இந்தியாவில் பயணிகள் விமானங்களை தயாரிக்கும் திட்டம் – ரஷ்யாவுடன் செய்த ஒப்பந்தம் என்ன?

Byadmin

Nov 9, 2025


SJ-100 விமானம் 2008ம் ஆண்டு முதன்முறையாக பறந்தது.

பட மூலாதாரம், UAC – Yakovlev

படக்குறிப்பு, SJ-100 விமானம் 2008ம் ஆண்டு முதன்முறையாக பறந்தது.

இந்தியா அக்டோபர் 28ம் தேதி ரஷ்யாவுடன் விமான போக்குவரத்து தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 103 பேர் பயணிக்கும் வகையிலான ரஷ்யாவின் SJ-100 பயணிகள் விமானத்தை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கான முதல் படியாக இது கருதப்படுகிறது.

விமான போக்குவரத்து சந்தையில் உலகிலேயே மூன்றாவது பெரிய நாடாக இந்தியா இருக்கும் நிலையில், இந்த ஒப்பந்தம் முக்கியமானது, கடந்தாண்டு 35 கோடி மக்கள் விமானத்தில் பயணித்துள்ளனர்.

SJ-100 ஓர் இரட்டை எஞ்சின் கொண்ட விமானம், முன்பு இது சுகோய் சூப்பர்ஜெட் (SSJ) -100 என அறியப்பட்டது, மாஸ்கோவை தளமாக கொண்டு செயல்பட்டு வரும் யுனைடெட் ஏர்கிராஃப்ட் கார்ப்பரேஷன் (UAC) நிறுவனம் இதை தயாரிக்கிறது.

இந்த விமானத்தில் அதிகபட்சமாக 103 இருக்கைகள் உள்ளன. அந்த நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த வகை விமானம் ரஷ்யாவின் 9 விமான நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகிறது.

பெங்களூருவை தளமாக கொண்டு செயல்பட்டுவரும் அரசு பாதுகாப்பு நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL), இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்கான பணிகளை கவனித்துக்கொள்ள உள்ளது.

By admin