• Sun. Aug 10th, 2025

24×7 Live News

Apdin News

இந்தியாவில் பல மாடி கட்டடங்களிலும், குடிசைகளிலும் ஒருசேர அதிரச் செய்யும் குடியேற்ற சோதனை – என்ன நடக்கிறது?

Byadmin

Aug 10, 2025


டெல்லி, வங்காள முஸ்லிம்

பட மூலாதாரம், Zoya Mateen/BBC

படக்குறிப்பு, சட்டவிரோத குடியேறிகளைப் பிடிக்கும் தொடர்ச்சியான நடவடிக்கைகளால் இந்தியாவில் ஆயிரக்கணக்கான வங்காள முஸ்லிம் குடும்பங்கள் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்கொள்கின்றன.

டெல்லிக்கு அருகிலுள்ள உயர்தர புறநகர்ப் பகுதியான குருகிராமில், பளபளக்கும் எஸ்.யு.விகளும், நவீன வடிவமைப்பு கொண்ட வானளாவிய கட்டிடங்களும்,நேர்த்தியான குடியிருப்புகளும், அருகிலுள்ள குப்பைக் குவியல்கள் மற்றும் தார்பாய் குடிசைகளுக்கு முற்றிலும் மாறாக நிற்கின்றன.

சுற்றுச்சுவர் எழுப்பப்பட்ட வளாகங்களில் இந்தியாவின் பணக்காரர்கள் வசிக்கின்றனர், அதேநேரம் அருகிலுள்ள குடிசைப் பகுதிகளில் இந்த செழிப்பைத் தொடரச் செய்ய ஏழை புலம்பெயர் தொழிலாளர்கள் – பெரும்பாலும் வீட்டு வேலைக்காரர்கள், துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் தினக்கூலி தொழிலாளர்கள் வாழ்கின்றனர்.

கடந்த மாதம், சட்டவிரோத வங்கதேச குடியேறிகளை இலக்காகக் கொண்டு “சரிபார்ப்பு” நடவடிக்கையில் ஈடுபட்ட உள்ளூர் அதிகாரிகள் நூற்றுக்கணக்கான இத்தொழிலாளர்களை கைது செய்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தாங்கள் மேற்கு வங்கத்தை சேர்ந்த வங்காள மொழி பேசும் முஸ்லிம்கள் என கூறுகின்றனர்.

கைது செய்யப்பட்டவர்கள் “தடுப்பு மையங்களில்” வைக்கப்பட்டு, தங்கள் குடியுரிமையை நிரூபிக்க ஆவணங்களை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். பலர் இந்த நடைமுறையின் போது காவல்துறையால் அடிக்கப்பட்டு மோசமாக நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டுகின்றனர். காவல்துறை அதிகாரிகள் இந்த குற்றச்சாட்டுகளை மறுக்கின்றனர்.

By admin