• Mon. Nov 17th, 2025

24×7 Live News

Apdin News

இந்தியாவில் மிக அதிக காற்று மாசு இருந்தாலும் உச்ச வரம்பை 500ஆக அரசு நிர்ணயித்திருப்பது ஏன்?

Byadmin

Nov 17, 2025


இந்தியா - காற்று மாசு - ஏக்யூஐ அளவு

பட மூலாதாரம், Hindustan Times via Getty Images

படக்குறிப்பு, இந்தியாவின் காற்று தர குறியீடு (AQI) தனியார் மானிட்டர்களில் 500-ஐ விட மிகவும் அதிகமாக இருக்கலாம்

வட இந்தியாவில் வாழும் லட்சக்கணக்கான மக்களுக்கு, நவம்பர் மாத காற்று சாம்பல் வாசம் கொண்டதாக இருக்கும், வானம் புகைமூட்டமாகவே தெரியும், வெளியே செல்வதே ஒரு பெரும் சவாலாக இருக்கும்.

காற்று எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை பரிசோதிப்பதில் இருந்தே பலரின் நாளும் தொடங்குகிறது. ஆனால், அவர்கள் என்ன பார்க்கிறார்கள் என்பது அவர்கள் பயன்படுத்தும் மானிட்டரை பொறுத்தே அமைகிறது.

சஃபார் (SAFAR) மற்றும் சமீர் (SAMEER) போன்ற அரசு ஆதரவு செயலிகள், இந்தியாவின் ஏக்யூஐ (AQI) அளவுகோலில் உள்ள 500 என்ற உச்ச வரம்பில் முடிந்துவிடுகின்றன. இந்த அளவுகோல் பிஎம்2.5, பிஎம்10, நைட்ரஜன் டையாக்சைடு, கந்தக டையாக்சைடு, கார்பன் மோனாக்சைடு மற்றும் ஓசோன் போன்ற பல்வேறு மாசுகள் பற்றிய சிக்கலான தரவுகளை ஒரே எண்ணாக மாற்றுகிறது.

ஆனால் ஐக்யூஏர் (IQAir) போன்ற தனியார் மற்றும் சர்வதேச டிராக்கர்கள், ஏக்யூஐ போன்ற ‘ஓப்பன்-சோர்ஸ்’ கண்காணிப்பு தளங்கள், அதை விடவும் மிக அதிக எண்ணிக்கையை காட்டுகின்றன. அவை பல சமயங்களில் 600-ஐத் தாண்டியும், ஒருசில நாள்களில் 1,000-க்கும் மேலும் கூட காட்டுகின்றன.

இந்த முரண்கள் ஒவ்வோர் ஆண்டும் அதே கேள்வியைத்தான் மீண்டும் மீண்டும் எழுப்புகின்றன. எந்த எண்களை நம்புவது? காற்றின் தரக் குறியீடு 500-ஐத் தாண்டும் போது அதை இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவிக்காதது ஏன்?

By admin