• Wed. Sep 10th, 2025

24×7 Live News

Apdin News

இந்தியாவில் முதல்முறையாக கடல்சார் வள அறக்கட்டளை: அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார் | India first marine resources trust

Byadmin

Sep 10, 2025


சென்னை: இந்​தி​யா​வில் முதல்​முறை​யாக கடல் வள பாது​காப்​புக்​காக அமைக்​கப்​பட்ட தமிழ்​நாடு கடல்​சார் வள அறக்​கட்​டளையை அமைச்​சர் தங்​கம் தென்​னரசு தொடங்கி வைத்​தார்.

தமிழ்​நாடு அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யம் மூலம் தேர்வு செய்​யப்​பட்ட வனக்​காவலர்​கள் மற்​றும் வனவர்​களுக்​கான பணி நியமன ஆணை​கள் வழங்​கும் நிகழ்ச்சி சென்னை கலை​வாணர் அரங்​கில் நேற்று நடை​பெற்​றது. வனத்​துறை அமைச்​சர் ஆர்​.எஸ்​.​ராஜகண்​ணப்​பன் தலைமை தாங்​கி, 333 வனப் பணி​யாளர்​களுக்கு பணி நியமன ஆணை​களை வழங்​கி​னார். அதைத் தொடர்ந்து இந்​தி​யா​வில் முதல்​முறை​யாக கடலோர சூழல் அமைப்​பு​களைப் பாது​காக்​க​வும், நிலை​யான வாழ்​வா​தா​ரங்​களை உரு​வாக்​கும் வகை​யிலும் ஏற்​படுத்​தப்​பட்ட தமிழ்​நாடு கடல்​சார் வள அறக்​கட்​டளையை நிதி​யமைச்​சர் தங்​கம் தென்​னரசு தொடங்கி வைத்​து, அறக்​கட்​டளை​யின் இலச்​சினை மற்​றும் சிறப்பு புத்​தகத்தை வெளி​யிட்​டார்.

இதையடுத்து சுற்​றுச்​சூழல் பாது​காப்பு மற்​றும் நிலை​யான வளர்ச்​சியை உறு​தி​செய்​யும் வகை​யில் மணலி, எண்​ணூர் மறுசீரமைப்பு மற்​றும் புத்​து​யிர் அமைப்பு மன்​றத்​தை​யும் தொடங்கி வைத்​து, பள்​ளி, கல்​லூரி​களுக்கு 2024, 2025-ம் ஆண்​டு​களுக்​கான மஞ்​சப்பை விருதுகளை அமைச்​சர் தங்​கம் தென்​னரசு வழங்​கி​னார்.

அப்​போது அவர் பேசுகை​யில், “காலநிலை மாற்​றத்​தால் ஏற்​படும் தாக்​குதல்​களை மிகச் சரி​யாக கையாள வேண்​டிய நிலை​யில் நாம் இருக்​கிறோம். இதைக் கருத்​தில் கொண்டு கடல் பகு​தி​யில் நீடித்த வள மேலாண்​மைக்​காக ஓர் அறக்​கட்​டளையை நாம் உரு​வாக்​கி​யிருப்​பது மிக​வும் பெரு​மைக்​குரியது. அதே​போல் தொழிற்​சாலை பகு​தி​களில் மக்​களுக்கு ஏற்​படும் சிரமங்​களைக் கண்​டறிந்​து, நடவடிக்கை மேற்​கொள்ள மணலி, எண்​ணூர் மறுசீரமைப்பு மற்​றும் புத்​து​யிர் அமைப்பு மன்​றம் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது. தமிழகத்​தின் நிலப்​பரப்பு மற்​றும் இயற்கை வளங்​களைப் பாலைவன​மா​காமல் பாது​காக்க வேண்​டிய பொறுப்பை நாம் ஏற்​றுக்​கொண்​டிருக்​கிறோம். பல்​லு​யிர் பெருக்​கத்​தில் இருக்​கும் ஒவ்​வோர் உயி​ரினங்​கள், மரங்​கள், நீர்​நிலைகள் ஆகிய​வற்றை நம் அரசு வனப் பணி​யாளர்​களின் பொறுப்​பில் விட்​டிருக்​கிறது” என்​றார்.

முன்​ன​தாக அமைச்​சர் ராஜகண்​ணப்​பன் பேசுகை​யில், “படித்து முடித்​தவர்​களுக்கு பல்​வேறு துறை​களில் தரவரிசை அடிப்​படை​யில் வேலை​வாய்ப்பு அளிப்​ப​தில் முதல்​வர் ஸ்டா​லின் தெளி​வாக இருக்​கிறார். தகு​தி​யான நபர்​கள் நேரடி​யாக தேர்​வாணை​யம் மூலம் தேர்ந்​தெடுக்​கப்​படு​வது மகிழ்ச்​சி​யான விஷ​யம். இதன்​மூலம் இடைத்​தரகர்​கள் தவிர்க்​கப்​பட்​டுள்​ளனர். இன்​றைக்கு தமிழகத்​துக்கு நிறைய தொழில்​கள் வந்து கொண்​டிருக்​கின்​றன. ஏராள​மானோருக்கு வேலை​வாய்ப்​பு​கள் கிடைக்​கின்​றன. மக்​களுக்கு தேவை​யான அனைத்து வசதி​களை​யும் அரசு ஏற்​படுத்தி வரு​வ​தால், இது மக்​களுக்​கான அரசாக திகழ்ந்து வரு​கிறது” என்று குறிப்​பிட்​டார்.

இந்​நிகழ்​வில் வனத்​துறை செயலர் சுப்​ரியா சாஹூ, வனத்​துறை தலை​வர் ஸ்ரீனி​வாஸ் ஆர்​.ரெட்​டி, சுற்​றுச்​சூழல் துறை இயக்​குநர் ராகுல்​நாத், தமிழ்​நாடு மாசுக்​கட்​டுப்​பாடு வாரிய தலை​வர் எம்​.ஜெயந்​தி உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.



By admin